புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து மேலும் அதிகளவிலான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்துள்ளனர். நேற்றைய தினம் (06) மட்டும் சுமார் 5,500 பேர் இவ்வாறு வந்து சேர்ந்துள்ளார்கள். இது தொடர்பாக பிரிகேடியா சவேந்திர சில்வா தகவல் தருகையில் இன்றும் (07) அதிக எண்ணிக்கையான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தவண்ணமுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.