“இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது.” – அமைச்சர் விமல் வீரவன்ச

“இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. அரசாங்கத்தின் இலக்கை திசை திருப்ப பல குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன.” என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் அவர்,

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி குறுகிய காலத்தில் அரசாங்கம் பல சவால்களை எதிர் கொண்டுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்ட சவால்களை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றி கொண்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அரச ஆதரவுடன் எழுச்சி பெற்றது.

ஜெனிவா விவகாரம் அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக காணப்பட்டது. சர்வதேசத்தில் மண்டியிடாமல் இராணுவத்தினரை அரசாங்கம் பாதுகாத்துள்ளது. ஜெனிவா விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *