பொதுமக்களின் தரிசனத்திற்கு புத்தரின் தந்தம்

புத்தபெருமானின் புனித தந்தம் இன்று 6ம் திகதி முதல் 16ம் திகதி வரை கண்டி தலதாமாளிகை யில் காட்சிக்கு வைக்கப் படவுள்ளது. இதனையிட்டு கண்டி பொதுச்சந்தையிலுள்ள இறைச்சிக் கடைகளும், மதுபானக் கடைகளும் பூட்டப்படவு ள்ளன.

புனித தந்தத்தைப் பொது மக்கள் தரிசனத்திற்குத் திறந்து வைக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தலதாமாளிகை தியவதன நிலமே நிலங்க தெல பண்டார தெரிவித்தார். இதன் ஏற்பாடுகள் குறித்து கண்டி கச்சேரியில் நடைபெற்ற குழுக் கூட்டத்திலேயே இதனை தெரிவித்தார்.

இறுதியாக ஐந்து வருடத்திற்கு முன்னர் 2003ல் காட்சிக்கு வைக்கப்பட்டது. நாட்டின் சுபீட்சத்திற்காகவும், சமாதானம் ஏற்பட்டு ஜனநாயகம் ஏற்படவும், 25 வருடகால யுத்தம் நீங்கவும் வேண்டியே இத்தரிசனத்தினை ஏற்பாடு செய்வதாகவும், மல்வத்த, அஸ்கிரிய பெளத்த பீடங்களின் மாநாயக்க தேரோக்களின் பூரண ஆசீர்வாதத்துடன் இத்தரிசனம் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *