“மாகாண சபைத் தேர்தலுக்கு நான் எதிரானவன்.” – அமைச்சர் சரத் வீரசேகர

“மாகாண சபைத் தேர்தலுக்கு நான் எதிரானவன். ஆனாலும் அரசாங்கமே குறித்த தேர்தலினை நடத்தினால் அதனை தடுக்க முடியாது.” பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத்  தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது,

“ மாகாண சபைத் தேர்தலுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.

ஒரு நாட்டில் ஒரு சட்டமொன்று இருந்தால் அது ஒன்பது மாகாணங்களுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும். மாறாக ஒன்பது மாகாணங்களுக்கு ஒன்பது சட்டங்கள் இருக்க முடியாது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இருப்பினும் தனிப்பட்ட கருத்தைப் பொருட்படுத்தாமல், நாம் கூட்டாகவே முடிவுகளை எடுக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *