இலங்கையில் தமிழர்களை பாதுகாக்க இந்தியா, ஐ.நா.முயற்சிக்க வேண்டும்

prakas.jpgமார்க் சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரகாஷ் கரத், மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் இரண்டரை லட்சம் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அந்த மக்களை வெளியேற்றி பாதுகாக்க இந்திய அரசும், ஐ.நா. சபையும் முயற்சிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையும், சுதந்திரமும் கிடைக்க அரசியல் தீர்வு ஏற்படவேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்திலும், ஆணையர்களை நியமிப்பதிலும் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் வலியுறுத்தி வருகிறது.

இதில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *