சவூதி அரேபியாவில் இருந்து பதினெட்டுப் பேர் கடந்த புதன்கிழமை அதிகாலை விமானம் மூலம் நாடு திரும்பினார்கள். சில மாதங்களுக்கு முன்னர் அங்கு சென்ற இவர்கள் தமக்கு உரிய சம்பளம் மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை என்றும் அதனால் தாம் அங்கு தொழில் செய்ய முடியாத நிலையில் நாடு திரும்புவதாகவும் தெரிவித்தனர்.
இவர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகள் விமான நிலையத்தில் பொறுப்பேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.