புலிகளின் 3 இலக்குகள் மீது 6 தடவை விமானத் தாக்குதல்

jet_11-12.jpgமுல்லைத் தீவில் தரை வழியாக முன்னேறிவரும் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இனங் காணப்பட்ட புலிகளின் வெவ்வேறு மூன்று இலக்குகளை குறிவைத்து நேற்று ஆறு தடவைகள் விமானத் தாக்குதல்களை நடத்தியதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப்படைக்குச் சொந்தமான மிக்-27, கிபீர் ஆகிய ஜெட் விமானங்களும், எம்.ஐ-24 விமானமுமே நேற்று முல்லைத்தீவில் கடும் தாக்குதல்களை நடத்தின.

புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து மேற்கு நோக்கி முன்னேறிவரும் நான்காம் படையணியினருக்கு ஒத்துழை ப்பு வழங்கும் வகையில் நேற்றுக்காலை 10 மணிக்கு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. சந்தியிலிருந்து ஒரு கிலோமீற்றர் மேற்கே இனங்காணப்பட்ட புலிகளது இலக்கு நோக்கி மிக்-27 தாக்குதல் நடத்தியது.

அதனைத் தொடர்ந்து காலை 11.20 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் கிழக்கிலுள்ள புலிகளின் இலக்குகள் மீது கிபீர் ஜெட் விமானம் தாக்குதல் நடத்தியது. இராணுவத்தின் 59ம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விங் கமாண்டர் கூறினார். முல்லைத்தீவு கடனீரேரியிலிருந்து ஒரு கிலோமீற்றர் வடமேற்கே அமைந்துள்ள இனங் காணப்பட்ட இலக்கின் மீது அடுத்தடுத்து நான்கு தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இராணுவத்தின் 59ம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இவை நடத்தப்பட்டுள்ளன. நண்பகல் 1.45 மணிக்கு மிக்-27 இன் மூலமாகவும் மாலை 3.30 மணிக்கு எம்.ஐ-24 விமானம் மூலமாகவும் மாலை 3.47 மணிக்கு கிபீர் ஜெட் மூலமாகவும் மாலை 5 மணிக்கு மிக்-27 ஜெட் விமானம் மூலமாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்கள் அனைத்தும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் விங் கமாண்டர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    5 வீதம் தான் இருப்பதாக சொல்லியே பல கிழமையாகி விட்டது. இப்போதும் ஆறுமுறை தாக்குதலா. அந்த ஆறு முறையில் ஒன்றுதான் வையித்தியசாலை மீது தாக்குதலா????

    Reply
  • santhanam
    santhanam

    புலி தனது முதலாவது மாற்றுகுழு மீதான யுத்தத்தை 1986 ம் ஆண்டு ஆரம்பித்தது 23 வருடகாலமாக தனது சொந்த இனத்துடன் போரடி வெல்லமுடியாத புலிகள் எப்படி எதிரியுடன் வெல்வார்கள். கடசியாக கிடைத்த செய்தி புலிகளை சரண்னடைய சொல்லி உலகம் எல்லாம் கேட்டுள்ளது.

    Reply
  • palli
    palli

    சந்தானம் இந்த நேரத்தில் இது தவறான கருத்தல்லவா???

    Reply