வன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்து வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவர்களின் தொகை அதிகரித்து வருவதால் அங்கு இரத்தம் தேவைப்படுவதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து ஈ.பி.டி.பி. மற்றும் புளொட் அமைப்புகளின் ஏற்பாட்டில் இரத்ததானம் செய்யப்பட்டது.
வன்னி மாவட்ட ஈ.பி.டி.பி. அமைப்பாளர் சிவன் சிவகுமார் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசபைத் தலைவர் செ.திஸவீரசிங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில் பல இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை இரத்ததானம் செய்தனர். இதேபோல, புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சூரியின் ஏற்பாட்டில் பல இளைஞர்கள் சனிக்கிழமை இரத்ததானம் செய்துள்ளனர்.
அத்துடன் புளொட் அமைப்பினர் வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் வன்னிப்பகுதி மக்களுக்கு உடு துணிகள் ,பெற்சீற் , உணவுப்பொருட்களையும் வழங்கினார்கள். இதேவேளை, மேலும் பலர் இரத்ததானம் செய்ய முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.