ஆரம்பமானது கொரோனா தடுப்பூசி போடும் பணி – இலங்கையில் போடப்படும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் இவை தான் !

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நோயாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கென பல வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில் ஒன்று கொவிஷீல்ட் தடுப்பூசியால் நேரக்கூடிய பக்க விளைவுகள் ஆகும்.

இதன்படி பொதுவான பக்க விளைவுகளாக தொடும் போது வலி, வலி, சிவத்தல், தோலில் அரிப்பு ஆகியவை அடங்கும். ஊசி போடப்பட்ட இடத்தில் வீக்கம், கண்டல் காயம் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் களைப்பு, குமட்டல், காய்ச்சல் போன்ற உணர்வுகளும் பொதுவான பக்கவிளைவுகளில் அடங்கும். லேசான காய்ச்சல், மூட்டு வலி மற்றும் தசை வலி ஆகியனவும் பொதுவானவை.

தலை சுற்றல், பசியின்மை, வயிற்று வலி மற்றும் தோலின் மீது செந்நிறப் பொட்டுக்கள் போன்றவை அசாதாரணமான பக்க விளைவுகளாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *