“எல்லையைத் தாண்டும் தமிழக மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்யும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது” – கதவடைப்பு போராட்டத்திற்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் அழைப்பு !

தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கோரியுள்ளது.

இதன்படி, வர்த்தக சங்கம், ஏனைய சங்கங்கள், அரசியல்வாதிகள் மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தினர் உள்ளிட்டோர் தமக்கு ஆதரவு தரவேண்டும் என கடற்றொழிலாளர்கள் சமாசத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் ஆதரவு கோரும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலேயே வட கடலில் மீனவர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றது. வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, எல்லையைத் தாண்டும் தமிழக மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்யும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்பதுடன் இது தொடர வேண்டும் என்பது எமது தொடர்சியான கோரிக்கையாகும்.

இலங்கை கடற்பரப்பில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற தமிழக மீனவர்களின் உயிரிழப்பு கவலையை ஏற்படுத்துகின்றதுடன் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதேவேளை எமது கடற்பரப்பிற்குள் நுளைய வேண்டாம் என மீண்டும் மீண்டும் கோருகின்றோம்.

அத்துடன், கருப்புக் கொடிகளைப் படகில் கட்டிக் கொண்டு மீன்பிடிக்க எமது எல்லைக்குள் வருவோம் என இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளதை அனுமதிக்க முடியாது” என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது ஒருபுறமிருக்க இந்திய மீனவர்கள் பயணித்த படகு கடந்த 18ஆம் திகதி நெடுந்தீவு அருகே இடம்பெற்ற சம்பவத்தில் தகர்ந்தது. இந்திய மீன்பிடிப் படகில் பயணித்த நால்வரும் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் தற்போது வரையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உள்ளன. இதனால் ஏற்பட்ட சர்ச்சையும் பதற்றமும் தமிழகத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றன.

இந்திய மீனவர்களின் உயிரிழப்பின் எதிரொலியாக யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தினக் கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *