ஆராய்ச்சியின் போது வௌவாலிடம் கடி வாங்கிய வுகான் விஞ்ஞானி – கொரோனாவிற்கான காரணத்தை தேடி பயணிக்கும் குழுவின் தேடலில் அதிர்ச்சி !

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் வௌவால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைரஸ் செயற்கையாக உருவானதா? அல்லது இயற்கையாக உருவானதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் சீனாவின் வுகான் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆய்வில் வைரஸ் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான வுகான் நகரில் உள்ள ஒரு குகையில் கடந்த 2017-ம் ஆண்டு வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த விஞ்ஞானி வௌவாலிடம் கடி வாங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டெய்லி மெயில் மற்றும் டெய்லி ஸ்டார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,

வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணியாற்றிவரும் சீனாவில் ’வௌவால் பெண்மணி’ என்று அழைக்கப்படும் ஷிங் ஷன்லி தனது குழுவுடன் வுகானில் உள்ள ஒரு குகைப்பகுதிக்கு 2017-ம் ஆண்டு சென்றுள்ளார். சார்ஸ் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிக்காக அவர்கள் வௌவாலை பிடித்து அதில் பரிசோதனை செய்துள்ளனர்.

அந்த குழுவில் இடம்பெற்றிருந்த வைரஸ் ஆராய்ச்சிளர் சியூ ஜியி என்ற அந்த குகையில் பிடித்த ஒரு வௌவாலில் இருந்து பரிசோதனை மாதிரிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *