“மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது தடுப்புமருந்து பற்றி யோசிக்காத அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டதும் மருந்துக்காக கூடிய கவனம் செருலுத்துகின்றது” – இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

“மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது தடுப்புமருந்து பற்றி யோசிக்காத அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டதும் மருந்துக்காக கூடிய கவனம் செருலுத்துகின்றது” என அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பெருமளவானவர்கள் பாதிக்கப்பட்டவேளை கொரோனா வைரஸ் மருந்து குறித்து கருத்து தெரிவிக்காத அதிகாரிகள் தற்போது கொரோனா மருந்தினை வழங்குவது குறித்து கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர் என அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிசாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக பல நிறுவனங்கள் மருந்துகளை தயாரித்துள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் இலங்கை இந்த மருந்துகளை கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்தவில்லை புராணக்கதைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள தீர்வுகளையே நாடியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உறுதிப்படுத்தப்படாத ஆயுர்வேத மருந்துகளில் கவனம் செலுத்தியதால் அரசாங்கம் மருந்தினை இறக்குமதி செய்வதை தாமதப்படுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட பின்னரே அரசாங்கம் மருந்துகள் குறித்து கவனம் செலுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *