“வடக்கில் இன்னமும் கொரோனா கொத்தணிகள் உருவாகவில்லை” – வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ்

“வடக்கில் இன்னமும் கொரோனா கொத்தணிகள் உருவாகவில்லை” என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. மேலும் வடக்கின் பல பகுதிகளிலும் மிக வேகமாக கொரோனா தொடர்பான அச்சமும் பரவி வருகின்ற நிலையில்,  சமகால நிலமைகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அறிவிறுத்தியிருந்த போதும் , சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் தகவல்களை வழங்கத் தவறியமையே கொரோனா தொற்றுப் பரவலுக்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.

மருதனார்மட தொற்று நிலைமை தொடர்பில் 500 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறியும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும்வரை, தொற்று சமூகப் பரவலாக உருமாருவதைத் தடுக்கும் நோக்கில், குறித்த இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஏற்கனவே பொதுமக்களுக்கு வெளியிடங்களிலிருந்து யாராவது உங்கள் பிரதேசங்களுக்கு வந்தால் அது தொடர்பில் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்குமாறு ஒரு அறிவித்தலை வழங்கியிருந்தேன். எனினும் இந்த அறிவிப்பு தொடர்பில் பொதுமக்கள் எமக்கு ஒத்துழையாமையே இன்றைய தொற்றுப் பரவுவதற்கு ஏதுவாகிவிட்டது.

மேலும் வடக்கில் இன்னமும் கொரோனா கொத்தணிகள் உருவாகவில்லை என தெரிவித்த ஆளுநர் மக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, தொற்றிலிருந்து தம்மையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *