சார்க் நாடுகளின் மின்சக்தி அமைச்சர்களின் மூன்றாவது மாநாடு எதிர்வரும் 28ஆம் 29ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி. ஜே. செனவிரத்ன மற்றும் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் வலய மின்சக்தி பாதுகாப்பு திட்டம் மற்றும் மின்சக்தி செயற்திரனை மேம்படுத்தல் என்பன குறித்து ஆராயப்படும். இந்த மாநாட்டில் சார்க் நாட்டு மின்சக்தி அமைச்சர்கள் மின்சக்தித்துறை சார்ந்த நிபுணர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொள்ள உள்ளனர்.
வலய ஒத்துழைப்பினூடாக மின்சக்தி பரிமாற்று திட்டமொன்றை முன்னெடுப்பது மற்றும் இலங்கை – இந்தியா இடையிலான கூட்டு மின்திட்டம் என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி சார்க் மின்சக்தி அமைச்சு செயலாளர்களில் மாநாடும் 29ஆம் திகதி மின்சக்தி அமைச்சர்களின் மாநாடும் நடைபெறும்.