வவுனியாவிற்கு நேற்று சனிக்கிழமை பிற்பகல் விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார். நெலுக்குளத்திலுள்ள வன்னி அகதிகள் தங்கியுள்ள முகாமுக்குச் சென்ற அகாசி அங்கு தங்கியுள்ளவர்களைப் பார்வையிட்ட போதும் அகாசியுடன் உரையாட அந்த மக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. அகாசியின் வவுனியா விஜயம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் வவுனியாவிலுள்ள இராணுவத் தலைமையகத்திற்கு வந்த அகாசியை படை உயரதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின் அவர் குருமண்காட்டிலுள்ள ஐ.நா.அலுவலகத்திற்குச் சென்று ஐ.நா.அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளார். இதுன்போது வன்னி நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடினார். இதன்பின் அவர் நெலுக்குளதிற்குச் சென்று வன்னியிலிருந்து வந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களிற்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார். அங்கு அவரை மாவட்ட அரசாங்க அதிபரும் சிரேஷ்ட அதிகாரிகளும் சந்தித்துப் பேசினார். இதன் போது அவர் வன்னியிலிருந்து வந்த அகதிகளைப் பார்வையிட்டார்.
santhanam
அகாசி உங்களது நன்றிகடன் சிங்களமக்கள் வாழ்நாளில் மறக்கமாட்டார்கள். சமாதானத்தை சிதைத்தபெருமை உங்களையும் சாரும்.