தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் 99 சதவீதம் முடிவுற்றுள்ளது. இன்னும் ஒரு வீதம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இவ்வாறு பாதுகாப்புத்துறைப் பேச்சாளரான அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டம் குண்டசாலையில் புதிய வர்த்தக நிலையம் ஒன்றின் கட்டடத்தைத் திறந்து வைத்துபேசுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்ககையில், ஒரு சில சதுர மீற்றர் நிலப்பரப்பே இப்போது விடுதலைப் புலிகள் வசம் உள்ளது. அதையும் இன்னும் சில நாள்களில் எமது பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிவிடுவர் திட்டமிட்டவாறு வடக்கில் இப்போது அச்சொட்டாக படைநடவடிக்கை முன்னேனற்றம் அடைந்து வருகிறது என்றார்.