LPL கிரிக்கெட் போட்டி தொடரின் காலி க்ளேடியேடர்ஸ் அணிக்கு தலைவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சஹிட் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
குறித்த அணிக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க தலைவராகா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் LPL தொடரில் இருந்து விலகுவதாக அவர் அண்மையில் அறிவித்திருந்தார் .
மேற்படி அணியின் உப தலைவராக பானுக ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .