உலகின் முன்னிலை வீரர்கள் பங்கேற்கும் ATP Finals டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு முன்னேறினார் ரஃபேல் நடால் !

உலக டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் (Rafael Nadal) அரையிறுதிக்‍கு முன்னேறியுள்ளார்.

உலகின் முன்னிலை வீரர்கள் 8 பேர் பங்கேற்கும் ATP Finals டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகின்றது.

வீரர்கள் இரு பிரிவுகளாக பிரிக்‍கபட்டு விளையாடி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஒன்றில், உலக தரவரிசையில் 2ஆம் இடத்திலுள்ள ஸ்பெயின் ரஃபேல் நடால், கிரேக்‍க வீரர் Stefanos Tsitsipas-ஐ எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-4, 4-6, 6-2 என்ற செட்கணக்‍கில் வெற்றிபெற்று அரையிறுதிக்‍கு முன்னேறியுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில், ரஷ்ய வீரர் Daniil Medvedev-வை, ரஃபேல் நடால் எதிர்கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *