“அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திற்கு அனுமதியளித்து சபாநாயகர் கையெழுத்திட்டமை வரவேற்கத்தக்கது ” – முன்னாள் சபாநாயகர் பாராட்டு !

“அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திற்கு அனுமதியளித்து சபாநாயகர் கையெழுத்திட்டமை வரவேற்கத்தக்கது ” என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த 22.10.2020 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய திருத்தச் சட்டம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

உலகிலேயே தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட உயர் அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி ஒருவரை இலங்கை கொண்டுள்ளது. இவ்வாறான மட்டற்ற உயர் அதிகாரங்கள் தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தப்படாது என்று நம்புகின்றோம். அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திற்கு அனுமதிளித்து சபாநாயகர் கையெழுத்திட்டமை வரவேற்கத்தக்கது என பதிவிட்டுள்ளார்.

கருஜயசூரிய அவர்கள் முன்னதாக கடந்த 22ஆம் திகதி தன்னுடைய டுவிட்டர் பதிவில் “1933ஆம் ஆண்டு ஜேர்மனிய நாடாளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது எனவும் அவ்வாறான ஓர் தவறை எமது நாடாளுமன்றம் செய்து விடக்கூடாது” எனக்குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *