வைத்தியசாலையில் கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபர் தப்பியோட்டம் ! – தீவிர தேடுதலில் பொலிஸ் !

ராகம வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரின் சிகிச்சை பெற்றுவந்த பேலியகொட பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் தகவல்களை மறைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேலியகொட பகுதியை சேர்ந்த இந்த நபரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர். இவர் பொது போக்குவரத்தில் பயணித்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. அவர் எவ்வாறு பயணித்தார் என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *