கொரோனா பிரச்சினையை ட்ரம்ப் தன்னுடைய சொந்த ஆதாயத்திற்காகவும் அரசியலுக்காகவும் பயன்னடுத்துகிறார் என ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அமெரிக்காவில் 2016 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்தது. அது குறித்து ஆய்வு செய்த செனட் புலனாய்வு குழுவில் நான் இருந்தேன். என்ன நடந்தது என்பது குறித்த விரிவான அறிக்கைகளை நாங்கள் வெளியிட்டோம். இந்த தேர்தலிலும், ரஷ்யாவின் தலையீடு இருக்கும் என தெரிகிறது. அவ்வாறு இருந்தால் அது, ஜனநாயக கட்சியை பாதிக்கும்.
கடந்த, 2013ல், உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக, ஷெல்பி ஹோல்டர் என்பவரின் வாக்குரிமை முடக்கப்பட்டது. இதையடுத்து, கறுப்பர்கள், தனி நபர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் வாக்குரிமையை முடக்கும் செயல்கள் தொடர்கின்றன.
வடக்கு கரோலினா மேல் முறையீட்டு நீதிமன்றம், கறுப்பர்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில், மிக நுணுக்கமான சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்திருப்பதே இதற்கு சான்று.
கொரோனா குறித்து, வல்லுனர்கள் விடுத்த எச்சரிக்கையை, டிரம்ப் அலட்சியப்படுத்தி விட்டார். அதே கொரோனா பிரச்னையை, தற்போது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார்.
இப்படிப்பட்ட ஒருவர், அமெரிக்க ஜனாதிபதியாக உள்ளார். எத்தகைய தடைகளையும் கடந்து, நாங்கள் வெற்றி பெறுவோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.