எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமோ, அவர்கள் அதை விட அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளனர்! – சுமந்திரன்

19ஆவது திருத்தத்தை ஒழித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை எதிர்க்குமென கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாங்கள் 19ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதனை ஒழிக்க முயல்கிறதென அவர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் தனது அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமோ, அவர்கள் அதை விட அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளனர்.

19ஆவது திருத்தத்தை அகற்றுவது நாட்டை மோசமான ஜனநாயக பாதையிலே கொண்டு செல்லும் வழி . இது நாட்டுக்கு கேடு, ஜனநாயக விரோதச்செயல், இதை நாங்கள் எதிர்ப்போம் என்பதை அரசுக்கு சொல்லி வைக்க விரும்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *