வன்னிக்கள முனையில் இடம்பெற்ற மோசமான சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ- விசாரணை நடத்தப்படுமென அரசதரப்பில் தெரிவிப்பு

rambukwella.jpg
வன்னிக்கள முனையில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவமொன்று தொடர்பாக வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்த முனையில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெண்போராளி ஒருவரது உடலை முழுமையாக நிர்வாணப்படுத்திய சில படையினர் அந்த உடலை மிகவும் மோசமான செயல்களுக்குட்படுத்துவது கையடக்கத் தொலைபேசியிலுள்ள கமெரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

சக படை வீரரொருவரால் வீடியோ படமெடுக்கப்பட்ட இந்த மோசமான செயல் பின்னர் இணையத்தளங்களூடாக உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது.  எழுத்துக்களாலோ சொற்களாலோ வர்ணிக்கப்பட முடியாத மிகவும் கேவலமானதொரு செயலென இதனை வர்ணித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தப் பெண்போராளியை சுற்றி நிற்பவர்கள் அணிந்திருக்கும் சீருடைகளும் அவர்கள் கத்திக்கூச்சலிடும் வார்த்தைகளும் அவர்கள் யாரென்பதை அடையாளங்காட்டுவதில் எதுவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லையெனவும் தெரிவித்திருந்தது.

மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட மிகக் கொடூரமானதும் குரூரமானதுமான செயலென வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்துமென பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்இதுபற்றி அவர் கூறுகையில்; இதுபோன்ற சில சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. எனினும் இவ்வாறான சம்பவங்களை விடுதலைப் புலிகள் தங்கள் பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருவது வரலாறு. ஐந்து இலட்சம் படையினர் மத்தியில் இவ்வாறான சில சில சம்பவங்கள் இடம்பெறத்தான் செய்யும். அதேநேரம் இவ்வாறான சில சம்பவங்களை வீடியோ படங்கள் மூலம் புலிகள் பெரும் பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருவதை நாம் அறிந்துள்ளோம். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைப் பெறவும் அவர்கள் முயல்வர். எனினும் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போமெனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Comments

  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “பயங்கரவாதிகளுக்கு எப்போதும் புத்தி வருவதில்லை. அவர்கள் மக்களின் பிணங்களின் மீத வாழுகிறார்க்ள.”
    ஆமா அண்மையில் ஆசியமனிதவுரிமை அமைப்பு வெளியிட்ட உலகமே இதுவரை கேள்விபடாத காம அரக்கதனத்தை பிணத்துடன் குடும்பம் நடத்தி அந்த வீரசாகச்தை வேறு வீடியோபதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட சிங்கள இராணுவத்தின் குரூரமனநிலையை உலகமே பார்த்து.

    Reply
  • ashroffali
    ashroffali

    முதலில் அந்த வீடியோவை நன்கு ஒரு தடவை பார்த்து விட்டு கருத்தைப் பதியுங்கள். ஏனெனில் அதில் இருப்பது கொச்சை சிங்களமே தவிர சிங்களவர் பேசும் சிங்களமல்ல. ஆக யார் செய்திருப்பார்கள் என்பது விளங்கக் கூடியது தானே? மன்னார் வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட மார்ட்டின் மூர்த்தி குடும்பத்தின் குட்டிச் சிறுமிக்கே கொடூரம் செய்து கொன்றுவிட்டு திசை திருப்ப முயன்றவர்களுக்கு இது ஒன்றும் கஷ்டமான விடயமில்லையே? இப்படி மாற்று கருத்து என்ற பெயரில் மாட்டுத்தனமாக சிந்திப்பவர்கள் இருக்கும் வரை பாசிசத்தின் கோரத் தாண்டவம் ஓயப் போவதில்லை. தமிழ் மக்களுக்கு விமோசனம் கிட்டப் போவதில்லை.

    Reply
  • ashroffali
    ashroffali

    //பிணத்துடன் குடும்பம் நடத்தி அந்த வீரசாகச்தை வேறு வீடியோபதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட சிங்கள இராணுவத்தின் குரூரமனநிலையை உலகமே பார்த்து.//
    கொஞ்சம் உங்கள் நினைவுகளை பின்னோக்கிச் செலுத்திப் பாருங்கள். 2004ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 09ம் திகதியை உங்கள் மனக்கண்ணில் கொண்டு வாருங்கள்.

    பல வருடங்களாக தங்களோடு தோளோடு தோள் நின்று போராடி விட்டு கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுவது தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டமைக்காக கருணா அம்மான் தலைமையிலான போராளிகள் துரோகிகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர்.அவர்களை அழித்தொழிக்க பாசிசப் புலிகள் பதுங்கி வருகின்றனர்.ஏப்ரல் 09ம் திகதி வெருகல் கதிரவெளி ஆற்றங்கரையோரமாக நிலை கொண்டிருந்த நூற்றுக் கணக்கான கிழக்கின் போராளிகள் கொன்று குவிக்கப்படுகின்றனர்.அவர்களுக்குள் இருந்த பெண் போராளிகள் சொர்ணம் பதுமன் எழிலன் ஆகியோரின் நேரடி வழி நடத்தலில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.ஒரு யுவதியை பலர் வரிசையாக நின்று வல்லுறவு மேற்கொள்ளும் கொடூரம் அங்கே ஆரவாரமாக அரங்கேறுகின்றது. அழகான யுவதிகள் முதலாவதாக தனக்கே விருந்தாக வேண்டும் என்று சொர்ணம் சப்புக் கொட்டிக் கொண்டு உத்தரவிடுகின்றார். துப்பாக்கி முனையில் கதறக்கதற அந்த வீரப் பெண்கள் சிதைக்கப்படுகின்றனர். பலரின் வல்லுறவால் பாதிக்கப்பட்டு குற்றுயிரும் குலையுமாக இருக்கும் அவர்கள் மனிதாபிமானமே அற்ற நிலையில் அரை உயிருடன் ஆற்றுக்குள் தூக்கியெறியப்படுகின்றனர்.அதிலும் அழகான பெண்கள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு சொர்ணம் பேஸ் நோக்கி கொண்டு செல்லப்படுகின்றார்கள். ஆற்றுக்குள் எறியப்பட்டவர்கள் அநியாயமாக மரணத்தைத் தழுவுகின்றனர்.சொர்ணம் பேஸ் கொண்டு செல்லப்பட்டவர்கள் பல நாட்கள் வரை சீரழிக்கப்படுகின்றனர்.

    இப்படியாக தங்களுடன் பல வருடக்கணக்கில் இருந்து பிரிந்த பெண் போராளிகளைக் கொடுமைப்படுத்திய புலிகள் பிரசார இலாபத்துக்காக தங்கள் இறந்த பெண் புலிகளுடன் குடும்பம் நடத்தி அதை வீடியோவில் போடுவதற்கு எந்த வகையிலும் தயங்க மாட்டார்கள். எதிரிக்குச் சகுனம் பிழைப்பதற்காக தங்கள் மூக்கை வெட்டிக் கொள்வதற்கு என்றைக்கும் தயங்காதவர்கள் புலிகள் என்பது பல தடவைகள் நிரூபணமான உண்மை என்பது மட்டும் சிலருக்கு சிலநேரங்களில் வசதியாக மறந்து போய் விடுகின்றது.

    Reply
  • rathy
    rathy

    அஸ்ரப் அலி பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.கருனா பிரிந்த போது வட பகுதியை சேர்ந்த புலி தலைவர்கள் சிலர் தான் கிழக்கு மாகணத்தின் மேல் படை நடத்தி சில கிழக்கு மாகண தலைவர்களை கைது செய்தனர் அதில் சொர்ணம்,பதுமன் ஆகியோர் அடக்கம்.

    //உலகமே இதுவரை கேள்விபடாத காம அரக்கதனத்தை பிணத்துடன் குடும்பம் நடத்தி அந்த வீரசாகச்தை வேறு வீடியோபதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட சிங்கள இராணுவத்தின் குரூரமனநிலையை உலகமே பார்த்து.//
    கெகலிய ரம்புக்கல கூட சிங்கள ஆமி இப்படி செய்திருக்கலாம் என்றூ குறூகிறார். விசாரனை நடத்தப்படும் என்ரு சொல்கிறார். ஆனால் இங்கு ஒருவர் அதை முற்றகாக மறைத்து புலிகள் மீது பலியை போடுகிறார்.

    Reply
  • ashroffali
    ashroffali

    ரதி….//அஸ்ரப் அலி பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.கருனா பிரிந்த போது வட பகுதியை சேர்ந்த புலி தலைவர்கள் சிலர் தான் கிழக்கு மாகணத்தின் மேல் படை நடத்தி சில கிழக்கு மாகண தலைவர்களை கைது செய்தனர் அதில் சொர்ணம்,பதுமன் ஆகியோர் அடக்கம்.//
    எனக்குப் பொய் சொல்வதற்கு எந்தத் தேவையுமில்லை. அதனால் எந்த லாபமும் இல்லை.

    தொப்பிகலை மீட்கப்பட்ட போது சொர்ணம் தான் புலிகளின் கட்டளைத்தளபதியாக கிழக்கில் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அதற்கு முன்பே வடக்குத் தளபதிகளால் அவர் சிறைப்பிடிக்கப்பட்டாராயின் கிழக்கின் கட்டளைத்தளபதியை அவருக்கு வழங்க புலிகள் இயக்கம் முன்வருமா? இராணுவத்தினரின் கிழக்கு மீட்பு நடவடிக்கையின் போது புலிகளின் புலனாய்வுப்பொறுப்பாளராக பதுமன் செயற்பட்டதை நீங்கள் அறிவீர்களா? நான் பின்னூட்டங்களாக இடும் விடயங்கள் மிகத் தெளிவாக உறுதிப்படுத்திக் கொள்ளப்பட்ட பின்பே இடப்படுகின்றன. மற்றபடி செவிவழிச் செய்திகளை முழுமையாக நான் நம்புவதுமில்லை. அவற்றை பின்னூட்டமாக இடுவதுமில்லை.

    Reply
  • ratnam.raja
    ratnam.raja

    ரதி அக்கா எங்களுக்கு எந்தசெய்தியும் உண்மையாக வந்து சேர்வதில்லை. அவர் அவர் தமது அறிவுக்கேற்றமாதிரி வடிகட்டி உண்மையை ஏற்றுகொள்ளுகிறார்கள். உங்கள் அறிவுக்க அஷ்ராப்அலி ராணுவத்தின் பக்கம். நீங்கள் புலியின் பக்கம். மூவினமக்களுக்கு இராணுவமா புலிகளா பெரியபங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்பதை முடிவெடுக்கிற பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

    Reply
  • rathy
    rathy

    புலிகள் கிழக்கு மாகணத்தை பானுவின் தலைமையிலலேயே மீட்டனர்.முதலில் கிழக்கு மாகண தலைவர்களை கைது செய்து பின் அவர்கள் குற்றமற்றவர்கள் என நிருபீக்கப்பட்டு பழைய பதவி அவர்கலுக்கு வழங்கப்பட்டது.இதில் முக்கிய விடயம் அவர்கள் தங்கள் சக உறூப்பினரை கற்பழித்தனாரா? இல்லையா? என்பதாகும். அதற்கு முதலில் பதில் கூறூம்.

    Reply
  • palli
    palli

    இந்த விவாதத்துக்கு நான் வரவில்லை. பல்லியை பொறுத்தமட்டில் கொலையை எந்த கட்டத்திலும் ஏற்றுகொள்ளாது. ஆனாலும் இந்த செயல் யார் செய்திருந்தாலும் அவர்களை அழிப்பதுக்காக முதல் கல் பல்லியினதாக இருக்க வேண்டுமென பல்லி ஆதங்க படுகிறது.அந்த காட்ச்சியை பார்த்ததில் இருந்து ஏதோ புரியாத கோபம் மனிதைனத்து மீது வருகிறது.உன்மையில் இதை அரசு செய்திருந்தால் இந்த தலைமுறையல்ல எந்த தலைமுறையும் சிங்களருடன் இனைந்துவாழ முடியாது. அனால் இதை விளம்பரத்துக்காக புலி செய்திருந்தால்(இருக்காது இருக்கவும் கூடாது) நாம் தமிழராக பிறந்ததுக்கு வெக்கி தலை குனிவதுதான் மேல். ஆனாலும் இதை விடமோசமான சில பாலியல் கொடுமைகளை புலி செய்த்தது என்பதை மறுக்க முடியாது.பிரபாகரனுக்கு மதிவதனியை கட்டாய மனைவியாக கடத்தி சென்று கொடுத்தவர்களில் ர……….ஒருவர். ஆனால் அவர்2000ம் ஆண்டில் ஒரு பெண் புலியை விரும்பி அதை தனது தலைவரிடம்(இவர் தலையின் அதி உயர் காவலர் என்பது குறிப்பிட தக்கது) சொன்னார்.அதுக்கு தலைவர் அது சரிவராது திருமனமானால் சிந்தனைகள் சிதறிவிடும் .பின்ன்பு பாதுகாப்பு சரியாக இருக்காது என மறுத்துவிட்டார்.ர…..பின்பு கருனா மூலம் இந்த விடயத்தை தலைவரிடம் கேட்டார்(கருனாவும் ர………நண்பர்கள்) தலைவர் மறுத்தது மட்டுமல்லாமல் தனது பாதுகாவலனென்றும் பாராமல் அன்று இரவே ர…அந்தபெண்ணையும் தென்னை மரத்தில் கட்டி காதலுக்கு மரியாதை செய்தார்.(கொலைதான்)இது உன்மையா இல்லையா? என இப்போதுதான் அம்மானின் ஆட்கள் ஊர் பூரா திரிகிறார்கள். அவர்கள் யாராவது அம்மானின் காதை கடித்தால் இந்த கொடூரமும்தெரிய வரும்.இதிலும் அம்மானுக்கும் பொட்டருக்கும் நேரடி வாக்கு வாதம் நடந்தது. பிண்த்தையே மதிக்க தெரியாத மிருகங்கள் மக்களை மதிப்பார்களென நாம் கனவு கானுவது முட்டள்தனம்தானே..

    பல்லி.

    Reply
  • ashroffali
    ashroffali

    //புலிகள் கிழக்கு மாகணத்தை பானுவின் தலைமையிலலேயே மீட்டனர்.முதலில் கிழக்கு மாகண தலைவர்களை கைது செய்து பின் அவர்கள் குற்றமற்றவர்கள் என நிருபீக்கப்பட்டு பழைய பதவி அவர்கலுக்கு வழங்கப்பட்டது.இதில் முக்கிய விடயம் அவர்கள் தங்கள் சக உறூப்பினரை கற்பழித்தனாரா? இல்லையா? என்பதாகும். அதற்கு முதலில் பதில் கூறூம்.//
    ரதி நீங்கள் தொடர்பு வைத்திருக்கும் புலிகளின் உறுப்பினர்களிடம் கேட்டால் அவர்கள் உண்மையைச் சொல்வார்கள்.

    2007ம் ஆண்டில் கிழக்கு மாகாணம் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பின்பு வாகரை கதிரவெளி வெருகல் என அனைத்துப் பிரதேசங்களினதும் நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தவன் என்ற வகையில் அந்தப் பிரதேசங்களையும் மக்களையும் நான் நன்கு அறிந்தவன். இராணுவ நடவடிக்கையின் பின்னால் நேரடியாக களத்தில் நின்று மக்களின் தேவைகளை கவனித்தவன் என்ற வகையில் நான் பல விடயங்களை ஆதாரபூர்வமான சாட்சிகளின் வாயிலாக சேகரித்து வைத்துள்ளேன். ஆனாலும் ஒரு சில தகவல்கள் எமது இனத்துக்கே அவமானம் ஏற்படுத்தக் கூடியது என்பதால் அவற்றை நான் வெளியிடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் இருக்கிறேன்.

    வெருகல் ஆற்றங்கரையோரம் புலிகளால் நூற்றுக் கணக்கான வீர மங்கைகள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்த சம்பவம் நான் ஒன்றும் பொய்யாகப் புனைந்த விடயமல்ல. அதற்கான சாட்சிகள் ஏராளமாக அந்த மண்ணில் இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தேவையென்றால் நீங்கள் வாருங்கள். நான் உங்களை கூட்டிச் சென்று ஆதாரங்களை காட்டுவேன். என்னதான் நீங்கள் புலிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தாலும் இந்த விடயம் தொடர்பாக என்னுடன் கூட வருவதற்குத் தயங்க வேண்டாம். நீங்கள் கூறும் இடத்தில் வைத்து உங்களை ஏற்றிக் கொள்வது தொடக்கம் நீங்கள் விரும்பிய இடத்தில் இறக்கி விடுவது வரையான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன். மேலும் குறித்த பயணத்தின் போது எனக்குள்ள சலுகையைப் பயன்படுத்தி உங்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் வராமல் பார்த்துக் கொள்வேன். நீங்கள் வரத் தயாரா? இதை ஒரு பொது அழைப்பாகவே விடுக்கிறேன். தேசம்நெற்றையும் அதன் வாசகர்களையும் சாட்சியாக வைத்தே உங்களுக்கான அழைப்பை விடுக்கிறேன். என் உறுதிமொழியில் நான் மாறப் போவதில்லை என்பதற்காகவே இவ்வாறான பகிரங்க அழைப்பை விடுக்கிறேன். நீங்கள் வரத் தயாரா? உண்மைகள் உறங்கக் கூடாது. என்றைக்காவது அவை வெளி வந்து தான் ஆக வேண்டும். அதற்காகத் தான் அழைக்கிறேன்.

    கதிரவெளியில் இன்றும் ஒரு வாலிபர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவரது நெருங்கிய நண்பராக இருந்த ஒருவர் அக்காலத்தில் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து கருணா அம்மான் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்தார். குறித்த நண்பர் அக்காலகட்டத்தில் வெருகல் ஆற்றோரம் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தார். அவரைச் சந்திக்க அந்த வாலிபர் தினமும் போய் வந்து கொண்டிருப்பது வழக்கமாக இருந்துள்ளது. அப்படி அவரும் வெருகல் ஆற்றங்கரையின் ஒதுக்குப் புறமொன்றில் இருந்த நிலையில் தான் அங்கு மோதல் வெடித்துள்ளது. உடனடியாகச் செயற்பட்டு தன்னை உருமாற்றிக் கொண்ட அந்த வாலிபர் நடந்த அத்தனை விடயங்களையும் நேரடியாக கடைசி அவதானித்துள்ளார். தங்களுடன் மோதலில் கொல்லப்பட்ட கிழக்கு உறுப்பினர்களை புலிகள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை அவர்தான் என்னிடம் விலாவாரியாக விவரித்தார்.

    கொல்லப்பட்ட அத்தனை இளைஞர்களின் உடல்களையும் சிதைப்பது தொடக்கம் அவற்றை மிருகங்களுக்கு இரையாக்குவது வரை புலிகள் செய்த அவ்வளவு கொடூரங்களும் புகைப்படங்களாக மட்டுமன்றி வீடியோ பதிவும் செய்யப்பட்டதாம். அந்த வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளின் ஒரு பிரதி பின்னாளில் எழிலன் எனப்படும் புலித்தலைவரால் சம்பூரில் வைத்து ஒரு சிலருக்கு காட்டப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன்.

    மோதலில் காயமடைந்த வீர மங்கைகளை புலிகள் ஆற்றோரமாக இழுத்துச் சென்று ஒருவரைப் பலர் சேர்ந்து வல்லுறவு மேற்கொண்ட பின்பு மிதவை மூலமாக ஆற்று மத்திக்கு எடுத்துச்சென்று பிறப்புறுப்பில் சுட்டு ஆற்றுக்குள் தள்ளி விட்ட கொடூரங்கள் நடந்தேறியதைக் கண்ட சாட்சிகள் நான் குறிப்பிட்ட வாலிபர் மட்டுமன்றி இன்னும் பலரும் இன்று வரை உயிரோடுதான் இருக்கின்றார்கள். அவையெல்லாம் கச்சிதமாக புகைப்பட ஒளிப்பட பதிவு செய்யப்பட்டதுதான் அதிலுள்ள முக்கியமான செய்தியாகும். அவை நேரடியாக பிரபாகரனுக்கு அனுப்பப்பட்டதாக தெரிய வருகின்றது. கிழக்கு மாகாண புலிகளின் தளபதிகள் தங்கள் விசுவாசத்தை வெளிக்காட்ட கருணா அம்மான் தலைமையிலான பெண் போராளிகளை மானபங்கப்படுத்த வேண்டும் அதற்கு மேலாக மரண வலி உணரப்படும் வரையில் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்ற பொட்டம்மான் + பிரபாகரனின் உத்தரவு அங்கே நடந்தேறிய உண்மை உங்களுக்கு தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியாக தமது விசுவாசத்தை வெளிக்காட்டியவர்கள் தான் பின்னாளில் புலிகளால் கெளரவிக்கப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் சொர்ணம் பேஸ் கொண்டு செல்லப்பட்ட ஒரு வீரமங்கை நள்ளிரவொன்றில் பலரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு தாங்கவொணா வேதனையில் தண்ணீர் கேட்டுக் கதறி இருக்கின்றார். அந்த நேரத்தில் தமிழீழம் வாழ்க என்று கூறும்படி சொர்ணம் உத்தரவிட்டுள்ளார். அதற்கு அந்த வீரமங்கை மறுக்கவும் அங்கிருந்த அனைவரையும் அந்த வீரமங்கையின் முகத்தில் சிறுநீர் கழிக்கும்படி சொர்ணம் உத்தரவிட்டுள்ளார். அதற்கு அடிபணிய தயங்கிய ஒரு தன்மானத் தமிழ் வாலிபன் உடனடியாக தனது பிறப்புறுப்பில் நெருப்பால் சூடு வைக்கப்பட்ட கொடூரத்தை எதிர்கொண்டான். அதையடுத்து அந்த யுவதியும் வாலிபனும் வெகு தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால் இருவரும் நெறி தவறி நடந்ததற்காகவே தண்டிக்கப்பட்டதாக புலிகள் பின்னாளில் அறிவித்திருந்தனர்.அவ்வாறான கொடூரங்களுக்குத் தொடார்ந்தும் உடன்பட மனம் ஒப்பாத நிலையில் புலிகள் அமைப்பை விட்டு தப்பியோடி வந்த ஒரு உறுப்பினர் கொடுத்த துல்லியமான தகவலின் அடிப்படையில் தான் பின்னாளில் சொர்ணம் பேஸ் மீது விமானத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. வெருகலாற்றுக் கரையோரம் கண்ட சம்பவங்களின் சாட்சியால் மனநிலை பாதிக்கப்ட்ட ஒரு இளைஞன் இன்றும் கூட அதே நிலையில் தான் வாழ்கிறான். இப்படியாக இன்னும் பல விடயங்களை குறிப்பிடலாம் . அது அந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் மனதை இன்னும் காயப்படுத்தி விடும் என்பதால் தான் அனைத்தையும் எனக்குள் வைத்துக் கொண்டு பொருமிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இவற்றின் சூத்திரதாரிகள் என் கண் முன்னே தண்டிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணும் போதெல்லாம் என் மனக்காயம் சற்று ஆறிக் கொண்டிருக்கின்றது.

    Reply
  • anathi
    anathi

    “இது உன்மையா இல்லையா? என இப்போதுதான் அம்மானின் ஆட்கள் ஊர் பூரா திரிகிறார்கள். அவர்கள் யாராவது அம்மானின் காதை கடித்தால் இந்த கொடூரமும்தெரிய வரும்.”-palli

    காதல் ஜோடிகளான புலிகள் இருவரை பிரபாகரன் கட்டளைப்படி சுட்டுக் கொன்றார்கள் என்பது கருணா பிரிந்த கையோடு தெரிவித்த விடயமாகும். ஆதலால் இது உண்மையே.

    Reply
  • palli
    palli

    ரதி பதுமன் கருனா பொட்டர் காச்சல் ஏற்பட்டவுடன் பொட்டர் முதலில் பதுமனை அன்புகைது செய்து. வன்னியில் தோட்ட வேலை செய்ய விட்டதை அனைவரும் அறிந்த்திருந்தும். ரதி அறியாமல் போனதுக்கு புலிபாசம் விடவில்லையோ.

    Reply
  • thamiz
    thamiz

    இலங்கை ராணுவத்தினரின் மனிதாபமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் [8 Jan 2009 | One Comment | ]

    இலங்கை ராணுவத்தினரின் மனிதாபமற்ற காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை இதில் வரும் காட்கிகள் இலங்கை ராணுவத்தினரால் இறந்த புலிகளின் பெண்போராளிகளை காண்டுமிராண்டித்தனமாக கேவல படுத்துவதை காட்டுகின்றது. இது மிகவும் கண்டிக்கப்படவேண்டிய செயலாகும்.
    இது சம்பந்தமாக Asian Human Rights Commission இலங்கை அரசிடம் இது பற்றி ஆராயவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

    எச்சரிக்கை: உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காட்ச்சி

    Reply
  • rathy
    rathy

    அஸ்ரப் அலி நான் கேட்பதற்கு பதில் சொல்லவும்.
    இந்த விடயம் கருனா, பிள்ளாயான் கூட்டனிக்கு தெரியாதா? அப்படி தெரிந்திருந்தால் இதை இவ்வளவு காலமும் ஏன் உலகத்திற்கு தெரியப்படுத்தவில்லை? இவ்வளவு காலமும் நீரோ, அல்லது அர‌சோ ஏன் இது ப‌ற்றீ க‌தைக்க‌வில்லை? சம்ம‌ந்த‌ப‌ட்ட‌வ‌ர்க‌ள் பாதிப்பு என்றால் இப்ப‌ ஏன் இதை ப‌ற்றீ க‌தைக்கீரிர் தற்போது அவர்கலுக்கு பாதிப்பு இல்லையா? ஆமி விவகார‌ம் வெளீயாளே தெரிந்த‌படியால் தானே. என்னை கூட்டி சென்ரு தான் சாட்சியங்களை வெளீப்படுத்த வேண்டும் என்ரு இல்லை சாட்சிக்கு நிற்பவர்கள் என்னொடு கதைக்க பயம் இல்லை என்றால் உலகத்திற்கு சொல்ல என்ன பயம்? ஜ நா, போன்ற சர்வதேச தொண்டு நிறூவனங்களூக்கு கூட இது பற்றீ தெரியாதா? தொண்டு நிறூவனங்களூக்கு இது பற்றீ நீங்கள் அறீவிக்கவில்லையா? இல்லையாயின் ஏன்?

    Reply
  • BC
    BC

    என்ன இது? இந்த புலிக்கு தான் நமது மாற்றுகருத்து தோழர் பின்னணி பாடுகிறாரா?

    Reply
  • rathy
    rathy

    //palli on January 10, 2009 11:34 am ரதி பதுமன் கருனா பொட்டர் காச்சல் ஏற்பட்டவுடன் பொட்டர் முதலில் பதுமனை அன்புகைது செய்து. வன்னியில் தோட்ட வேலை செய்யவிட்டதை அனைவரும் அறிந்த்திருந்தும். ரதி அறியாமல் போனதுக்கு புலிபாசம் விடவில்லையோ.//
    பல்லி முதலில் என் கருத்தை கவனமாக வாசிக்கவும். rathy on January 9, 2009 10:44 இதில் புலிகள் சொர்ணம்,பதுமன் ஆகியோரை கைது செய்தனர் என்ரு எழுடியுள்ளேன்.

    Reply
  • அயலவன்
    அயலவன்

    அஸ்ரப் அலி எழுதிய மேற் கூறிய விடயங்களுக்கு ஆதாரம் ஜரோப்பிய நாடு ஒன்றில் தங்சம் புகுந்துள்ள ஒரு வெருகல்ப் பிரதேச அகதி முழு நீள வீடியோ பிரதியை காண்பித்துள்ளதாயும் இதன் பின்னரே பல ஜரோப்பிய அரசுகளுக்கு புலிகள் பற்றிய மாற்றறம் ஏற்ப்பட்டதாயும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில் பல நேரடிச்சம்பவங்கள் பதிவாகி யிருப்பதாயும் இது மக்களின் பார்வைக்கு திரையிட பல முயற்ச்சிகள் எடுக்கப்படுகின்றது.

    இந்தப் புலிகள் ஆனையிறவு இராணவ முகாமில் சிங்கள இராணுவப் பெண்மணிகளுக்கு செய்ததை சந்திரிகா அரசு மறைத்துள்ளது இது பற்றி அஸ்ரப் அலி முடியுமாயின் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும்.

    Reply
  • poochchi
    poochchi

    பதுமன் ஒருபோதும் தோட்டவேலையும் செய்யவில்லை. அவர் புலிகளின் இராணுவ புலனாய்வு பிரிவின் திட்டமிடல் பிரிவிற்கு பொறுப்பாக உள்ளார். கருணாவின் பிரச்சனையின் போது இவருக்கும் கருணாவின் சிலநகர்வுகள் தெரிந்திருந்தும் சொல்லாமல் விட்டதற்கான தண்டனையாக திருகோணமலை கட்டளை தளபதி என்ற பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். அவரது பொறுப்பு மாற்றத்துக்கு பிறிதொரு காரணம் முன்னர் பதுமன் புலிகளின் தலைவரின் தனிப்பட்டசெயலராக மிகநம்பிக்கையானவராக இருந்தும் சொல்லதவறியது அவருக்கு மிக பெரியதண்டனையாக சகல பொறுப்புகளிலுமிருந்து நீக்கப்பட்டு சாதாரண பொறுப்புநிலைக்கு உட்படுத்தப்பட்டார்.

    பிரபாகரனின் மனைவியான மதிவதனி உட்பட பல்கலைக்கழக மாணவர்களின் கடத்திசெல்லப்பட்டதில் புலிகளின் மூத்த உறுப்பினர் குண்டப்பா அல்லது ரகு அல்லது மண்டைக்கண்ணன் என்பவரே தலைமைதாங்கி செயற்பட்டவர். ரகு பின்னர் இந்திய இராணுவ காலத்தில் வடமராட்சி பொறுப்பாக செயற்பட்டவர். அப்போது அவரதுநடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறுக்காக மணலாறு காட்டுக்கு அழைக்கப்பட்டபோது அமைப்பிலிருந்து விலகி இந்தியா சென்று லண்டனுக்கு வந்தவர். இப்போது புலிகளுக்கு மீண்டும் வேலை செய்கிறார்.

    காதலன் – காதலி தண்டனைக்கு உட்படுத்திய சம்பவம் 1988 இல் மணலாறு காட்டில் இடம்பெற்ற சம்பவம். இச்சம்பவம் தொடர்பான ஒரு குறிப்பு 1991இல் எனநினைக்கிறேன். விடுதலை புலிகளின் மகளிர் பிரிவின் அதிகாரபூர்வ ஏடு சுதந்திரப்பறவைகளில் வந்தது. இங்கு தண்டனைகு உட்படுத்தப்பட்டவர் புலிகளின் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு அணிக்கு மணலாறு காட்டில் பொறுப்பாக இருந்த தியாகு என்பவராகும். இந்தியா 5வது முகாமில் பயிற்சி பெற்றவர். இவர் மணலாறு காட்டில் இருந்த மகளிர் அணியில் இருந்த பெண்போராளிகளின்நலன் தொடர்பிலும் பிரபாகரனின் இணைப்பாளராகவும் பெண்போராளிகளின் முகாமுக்கு சென்றுவரும் போது அவ்முகாமில் இருந்த பெண்போராளியுடன் காதல்வசப்பட்டார். அதுபடிப்படியாக இருவரும் தகாத உறவு வரை சென்று சக பெண்போராளிகளுக்கு தெரியவந்ததை அடுத்து அப்பெண்போராளிகளால் பிரபாகரனுக்கு விடயம் தெரியப்படுத்தப்பட்டது. பிரபாகரனின் மிகநம்பிக்கையானவரின் இச்செயல்பாடு அவரை அக்காட்டிலேயே விசாரிக்கப்பட்டது. இந்திய இரானூவநெருக்கடிக்குள் இருக்கும் போது இவ்வாறான தவறுகளுக்கு தண்டனையளித்து ஏனையவர்களுக்கு ஒரு பாடமாக இருப்பதற்காக குறித்த பெண் போராளிகளுக்குள் இன்னோர் சக போராளியாக இருந்த தியாகுவின் கூடப்பிறந்த சகோதரியின்(பெயர்நினைவில் இல்லை – சாவகசேரியை சேர்ந்த்வர்)இடமும் இத்தவறுக்கான தண்டனையை எப்படி செய்யலாமென கேட்ட பின்னரே எல்லாப்போராளிகளின் முன்நிலையிலும் தண்டனை வழங்கப்பட்டதாக குறித்த சுதந்திரப்ப்றவைகள் ஏட்டில் தியாகுவின் சகோதரியான —- அவர் 1990களில் வீரமரணமடைந்த நாட் குறிப்பில் இது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒன்றும் இரகசியமல்ல. இங்கே கருணாவையும் இதற்குள் இழுத்துதுள்ளார்கள். இதிலும் நினைவில் இருந்தவற்றை அப்படியே தந்துள்ளேன்

    இந்த சம்பவத்தின் பின்னரே மணலாறு காட்டில் உள்ள பெண்கள் பிரிவின் அனைத்தும் பெண்களே பார்க்க கூடியபடி பெண்களுக்கு பொறுப்பாக சோதியா நியமிக்கப்பட்டார். இவரது பெயரிலேயே சோதியா படையணி பின்னர் ஏற்படுத்தப்பட்டது.

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    அயலவன்! இறுதியரக ரதிஅவர்கள் அஸ்ரப் அலி யை நோக்கி எழுப்பிய கேள்வி உங்களுக்கும் பொருத்தமானது! ஆதாரமிருந்தால் 2004ல் நடந்த சம்பவம் ஏன் இது வரை மனிதவுரிமை அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்பதை காரண காரியத்துடன் சொல்வீர்களா!

    Reply
  • indiani
    indiani

    மாற்று கருத்து தோழர் என்று கருத்து வெளியிடும் நண்பர் பலரது கருத்துக்களை மாற்றி எழுதி அதை அவர்கள் எழுதிய மாதிரி திருத்தி எழுதி அதற்கு எதிராக தான் கருத்து எழுதி ஒரு குழப்பத்தை இங்N;க ஏற்ப்படுத்துவதை நன்கு அவதானிக்;கக்கூடிதாக உள்ளது இப்படியாக முன்பு ரதன் ரகு எனப் பெயர் கொண்டு சிலர் செய்து வந்ததும் இவை தேசம் நெற்றிக்கு சுட்டக் காட்டியிருந்ததம் தெரிந்ததே.

    இதே போன்றதொரு வேலையை தற்போது எனது கருத்துக்கும் செய்துள்ளார் சுந்தரத்தின் மரணத்தின் பின் புளெட் தப்பியோடி தலைமறைவானதென்று எங்காவது நான் எழுதியுள்ளேனா? இப்படித்தான் புலிகள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு விடயத்திற்கும் நியாயம் கற்ப்பித்து இன்று வாங்கிக் கட்டுகிறார்கள் தாங்கள் செய்த கொலைகள் களவுகள் கொள்ளைகள் போன்றவற்றிக்கும் இப்படியாகத்தான் கடந்த 30 வருடங்களில் கதைவிட்டவர்கள் அவர்கள் விட்ட கதை கதையாகி விட்டது இவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதும் தமது புலிப் போராளிகளுக்கு செய்த உலக மாகா கேவலத்தை இப்போத நாம் கேள்விப்படுகிறோம் வெருகல் சம்பவம் நேரடி வீடியோ வெளிவந்துள்ளதும் – ஆனையிறவு சிங்கள இராணவ பெண்மணிகளுக்கு செய்தவைகள் – ரெலோ போராளிகளுக்கு செய்தவைகள் மிக சொற்பம் என்பதே எனது கணிப்பு இந்த பிணம் தின்னி இயக்கத்தின் வழிவந்த பலர் இன்றும் இதே மாதிரியான குணாதிசயங்களுடன் எம் மத்தியில் செயறப்ப்டுவதையும் காண்கிறோம் அவர்கள் அந்த உபாதையிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதையும் காண்கிறோம்.

    இங்கே இந்த பின்னுட்டத்தில் பிரபாகரனால் சுந்தரம் கொல்லப்பட்டதால் ஒரு மக்கள் அமைப்பு காட்டிக் கொடுக்கபபட்டது என்றும் இதனால் புளொட் தொடர்ந்து சாதாரண ஒரு அமைப்பாக செயற்ப்பட முடியாமற் போயிற்று என்பதே இது குடடடிமணி தங்கத்துரை போன்றோரக்கு பிரபாகரனால் செய்யப்பட்ட விடயமே……………

    இந்த சுந்தரம் கொலையுடன் அன்று புலிகளில் இருந்து செயற்ப்பட்ட தொடர்புடையவர்கள் லண்டனில் இருக்கிறார்கள் லண்டனில் இருந்து இயங்கும் தேசம் நெற் இது பற்றி ஆய்வு செய்யவும்…………………….

    காந்தீயம் ஆரம்பிக்கப்படபோது சுந்தரம் அல்லது புளொட் இருக்கவில்லை ஆனால் பின்னர் புளொட் உறுப்பினர்கள் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்து அவர்களது செயற்ப்பாட்டற்கு அரசியல் ஊட்டப்பட்டபோது காந்தீயம் புளெட்டுடள் சேர்ந்து மக்கள் அமைப்பாகவே இயங்கியது. இது பின்னர் சுந்தரத்தின் கொலையின் பின்னர் இந்த அமைப்புக்கும் புளொட்டுக்கும் உள்ள தொடர்பு தெரியவந்தபோது இந்த காந்தீயத்தையும் பயங்கரவாத அமைப்பாக அரசு நோக்கியது .

    புலிகள் எப்போதுமே மற்ற அமைப்பு;களை இப்படித்தான் அழித்து ஈற்றில் தான் எதுவுமே செய்யத் ;தெரியாமல் அதீத இராணுவ பலத்தைபாவித்து இராணுவத்துடன் மோதி (எத்தனை புலிகள் இழந்தாலும் பரவாயில்லை வெற்றி என்ற புலிகளின் போக்கில்) என்று இலங்கை இராணுவத்தை பலப்படுத்தி தானும் இன்று தோற்கிறது இது வரைகாலமும் மக்களுக்காக இவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது முக்கியமான காரணம் புலிகள் ஒரு தனி நபரின் சொல்லில் எல்லாம் முடிவு எடுக்கப்பட்டடு சரியான பாதையை அல்லது புதிய பாதையை அடைய முடியவில்லை இல்லை என்றால் 1987ல் கிடைக்விருந்த வட-கிழககு மாகாண சபையை விட்டு விட்டு இத்தனை புலிகளையும் இழந்து விட்டு இன்று நடேசன் அதுமாதிரியான…..என்று கதையளக்கிறார்

    ………………..தமிழர்கள் புலிகள் மற்ற இயக்கத்தின் மீது கொலைகளை ஆரம்பித்த போதே புலிகளால் அழிவு என்பதை முடிவு செய்து விட்டனர் அப்படியும் தமது பிள்ளைகள் புலிகளில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்ட்டபோது கிளிநொச்சியை விட்டு எப்படி ஓடமுடீயும் தமது பிள்கள் இறந்த செய்தி கேட்டவர்கள் வெளியேறியும் புலிகளைத் திட்டிக் கொண்டும் உள்ளே வாழ்வதும் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.

    …………….புலிகள் இலங்கையில் இரண்டாம் பெரும்பான்மை இனத்தை 3ம் பெரும்பான்மை இனமாக மாற்றியது தமிழர்க்கு செய்த துரோகமல்லவா இனியும் இவர்களை தொடரவிடாது தடுத்து நிறுத்தாவிட்டால் முழுத் தமிழர்களையும் அழித்துவிடுவர்.

    போராட வந்தவர்களை டயர் போட்டு தெருக்களில் கொலை செய்ய யார் எப்படி எதிர்த்து நின்று போராட முயல்வர் மனிதர்களுடன் கூட்டுச்சேர்ந்து இயங்கமுடியும் மிருகத்துடன் கூட்டு வாழ்க்கை வாழமுடியுமா?

    உங்கள் வாய்ச் சவடால்களைவிpட்டு விட்டு வெளிநாட்டில் சேர்த்த பணங்களுக்கு……………… உடனடியாக நீங்களும் உங்கள் பிள்ளைகளும் வந்து உங்கள் பாசிச இயக்கத்தை காப்பாற்றியிருக்க வேண்டுமல்லவா? வெளிநாடுகளில் இருந்து கொண்டு விடுங்கோ சவடால்களை எப்படியும் புலிகளுக்கு என்று சேர்த்து ஒழித்து வைத்த பணம் வெளிவரும் ;போது எலலாம் சரியாக பிடிபடும் ஜரோப்பிய பாஸ்போட்டுடன் ஏ9ல் நடக்கும் போது இலங்கை இராணுவம் உங்களை கண்டுபிடிககும்.

    ………………………….போராட்டம் என்பது முட்டாள் தனமாக கொலைக்களத்திற்கு மனிதர்களை அனுப்பி தலைவர் தான் வெற்றி கொண்டாடி விட்டு இறந்தவர்களுக்கு கல்லறை கட்டுவது அல்ல என்பதை புலிகளின் போராட்டம் இன்னும் உணரவில்லை- தமிழக தமிழன் –இந்தியானி

    Reply
  • ayalavan
    ayalavan

    மாற்றுகருத்துதோழர் //இது வரை மனிதவுரிமை அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்பதை காரண காரியத்துடன் சொல்வீர்களா!//

    இலங்கையில் இப்படியான மிருகங்கள் உள்ளதை உலகிக்கு எடுத்துச் சொல்ல உலகம் இப்படியான மிருகங்கள் தமிழர்களாம் என்று புனைவு வர இலங்கை அரசுக்கு விரும்பவில்லை – தமிழர்க்கு எதிராக இயங்க இலங்கை அரசு நினைத்திருந்தால் இது செய்திருக்க முடியும் இதெல்லாம் செய்வதைவிட மகிந்தா செய்பவர்களை அழிப்பதே மேல் என்ற முடீவு சரியானது காரணம் இவங்கள் இன்னும் செய்து கொண்டேதான் இருப்பாங்கள்.

    வன்னிக்குள்ளே நடந்த பல கொலைகள் குழந்தைகள் பஸ்ஸில் கொலை பதிரியார் கொலை ரி என் ஏ எம்பி கொலை ரிஎன்ஏ செல்வம் மீது குண்டுத்தாக்குதல்கள் ஆள ஊடுருவும் குழு என்ற பெயரில் புலிகளே செய்கிள்றனர் இப்படித்தான் போராட்டம் நடத்துவது என்று பிரபாகரன் இங்கிலீசு படங்களைப் பார்த்து முடிவு எப்வோ தீர்க்க தரிசனமாக எடுத்து விட்டாராம்.

    Reply
  • மாற்றுகருத்துதோழர்
    மாற்றுகருத்துதோழர்

    “இலங்கையில் இப்படியான மிருகங்கள் உள்ளதை உலகிக்கு எடுத்துச் சொல்ல உலகம் இப்படியான மிருகங்கள் தமிழர்களாம் என்று புனைவு வர இலங்கை அரசுக்கு விரும்பவில்லை ”
    இதே சிங்களபிரச்சார இயந்திரம் தமிழர்களின் போராட்டத்தை சர்வதேசத்தில் தமிழ்பயங்கரவாதமாக சித்தரித்திருந்தது. சிறுவர்போராளி மனிதகேடயங்கள்… இப்படி எத்தனை வகையான அவதூறு பிரச்சாரம் செய்யும்போது சர்வதேசத்தில் வராத விம்பங்களாக வல்லுறவு என்ற சொல் மூலம் தமிழர்மீது வரபோகுது.

    Reply
  • palli
    palli

    பூச்சி நீங்க சொன்னதை நாம் நம்புவோம் எப்போது தெரியுமா?? இதை கருனாவோ அல்லது பதுமனோ சொல்லட்டும். அதுக்கும் அவர்களுக்கு நேரம் இல்லை என நீங்க சொல்லலாம். இதை வட அவர்கள் அங்கு ஒன்றும் கிழிக்கவில்லை. மதியை கடத்தியது யாரென பல்லிதான் சொல்ல வேண்டுமல்ல அவரது முன்…..கா…..தற்போது லண்.. வசிக்கிறார் அவர் பலரிடம் புலம்புவது பூச்சிக்கு தெரிய வாய்ப்பில்லைதான். ஜயோ நாங்களும் உங்கடை தலமைகளுடன் கூடி கும்மாளம் குத்தியவர்கள்தான். தொடர்ந்து தேசத்தை கவனியுங்கள். ஆரம்ப காலத்தில் அளவில்லாத ரவுசருடன் சிலரும்; சரத்துடன் பலரும் பந்தா பண்ணிய பல பொக்கிசங்கள் வரும். பல்லியின் பணி தொடக்கி விடுவதுதான் முடிக்க பலர் காத்திருக்கிறார்கள்.

    அதுசரி இந்த சுகந்திர பறவை ஏடு யாருடையது?? அதில் புலிக்கு சாதகமான விடயத்தை விட ஏதாவது வந்ததா?? பல்லி சொன்னதை விட அதிகார பூர்வமாக தியாகுவும் கொல்லபட்டார். அப்படிதானே?? இப்படி எத்தனை தியாகிகள்??? யாராவது ஒருவரின் காதலியை கட்டாய திருமணம் செய்தால் அவருக்கு……………….பட்டம் ஆனால் உன்மையில் மனம் விரும்பிய இருவருக்கு சொர்க்கத்தில் தேன்நிலா.. அடேங்கப்பா?? ஆக பூச்சி புலி?? அதனால் நிலானிக்கு என்னதான் நடந்தது. பதுமனுடன் தோட்டம் செய்யும் மறுசர்வதேச போச்சாளர் திலகர் அப்படிதானே பூச்சி? என்ன பூச்சி எழுதுங்கள். அப்பதான் எமக்கும் சில கெட்டதுகள் நினைவு வரும். இந்த மதிவதனியும் நண்பிகளும் ரேலோவுக்கு ஆதரவாகதான் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியதாக சிலர் சொல்லுவது உன்மையா?? அப்படியாயின் அவர்கள் ஏன் புலிகளால் கடத்தபட்டனர்.

    பல்லி..

    Reply
  • ashroffali
    ashroffali

    வாகரை வெருகல் சம்பவங்கள் மறக்கப்பட மறைக்கப்பட பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது காரணம் அன்றைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காட்டிக் கொடுப்பு. அதாவது வெருகல் ஆற்றுக் கரையோரம் பாரிய மோதலுக்கான களம் உருவாகி வருவது தெரிந்தும் கருணா அம்மான் தரப்பிலான போராளிகளைப் பாதுகாக்க அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.அதற்குப் பதிலாக அந்தப் பிரதேசத்தின் அண்மையாக அமைந்திருந்த அனைத்து இராணுவ முகாம்களையும் செயலற்ற தன்மைக்கு அவர் மாற்றியிருந்தார்.மற்றது திருமலை மாவட்ட புலிகளின் வழிப்பாதையை தடை செய்வதற்கான அனைத்து வழிகளும் இருந்தும் அன்றைய அரசாங்கம் அவற்றை தட்டிக் கழித்து பாராமுகமாக இருந்து விட்டது. இப்படியாக அன்றைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் விட்ட தவறின் காரணமாக குறித்த விடயத்தை அம்பலப்படுத்த முடியாமற் போவதற்கான கட்டாயங்கள் நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது இலங்கை அரசாங்கம் என்ற வகையில் அவ்வாறான ஒரு கேவலத்துக்கு துணை போயிருந்தமை வெளியில் தெரிய வந்தால் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கம் தான் அவமானப்படும். அதற்காகத்தான் அந்தச் சம்பவம் வெளிப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டது.

    அடுத்ததாக புலிகள் தான் கொல்லப்பட்ட எவருடைய சடலத்தையும் மிச்சம் வைக்கவில்லையே. அனைத்தையும் ஏதோ ஒரு வகையில் அழித்து விட்டார்களே….அப்படியான நிலையில் சாட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு அதனை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வதில் எந்தப் பலனும் இல்லை.அரசாங்கத்தின் நம்பகத்தன்மைக்குத் தான் பாதிப்பு. அதுவும் ஒரு காரணம்.

    மேலும் அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் இயங்கிய புலி வாலான போர் நிறுத்தக் கண்கானிப்புக் குழுவினரிடம் அது தொடர்பில் பொதுமக்கள் ஏராளம் முறைப்பாடுகளைக் கொடுத்திருந்தனர். ஆனால் அவர்கள் புலிகளுக்கு சாதகமாக செயற்பட்டார்களே தவிர குறித்த சம்பவத்தைக் கண்டிக்கத்தானும் இல்லை. அப்படியாக சாட்சிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை.

    மற்றது இராணுவம் வெருகல் பகுதியை விடுவித்த போது சம்பவம் நடைபெற்று மூன்று வருடங்கள் கடந்து விட்டிருந்தது. அதன் காரணமாக எந்தத் தடயத்தையும் தேடிக் கொள்ள முடியவில்லை. அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டது. நான் வெருகலாற்றங்கரையில் தங்கியிருந்த காலகட்டத்தில் அந்த ஆற்றங்கரை நீளவும் அலைந்து திரிந்திருக்கிறேன். தான் கண்ட காட்சிகளை என்னிடம் பகிர்ந்து கொண்ட அந்த நண்பர் கதிரவெளி வரை என்னை ஒவ்வொரு பிரதேசமாக எங்கும் நடாத்திக் கூட்டிப் போய் அனைத்தையும் விளக்கமாக உருக்கமாக தெரிவித்திருந்தார். வெருகலாற்றில் போடப்பட்ட வீரமங்ககைளின் சடலங்களை அங்கு வாழும் கொடிய முதலைகள் சிதைப்பதற்குப் போட்டிபோட்ட காட்சியை அவர் விபரித்த போது தேம்பித் தேம்பி அழுது விட்டார். அப்படியாக கண்ணால் கண்ட ஒருவருக்கே தாளவொண்ணாத மனவேதனை ஏற்படும் போது அந்த வீரமங்கைகளை பெற்றெடுத்து வளர்த்த தாய் தந்தைக்கும் உறவாடி மகிழ்ந்திருந்த உற்றார் நண்பர்களுக்கும் அது பற்றித் தெரிய வரும் போது எவ்வளவு வேதனை ஏற்படக் கூடும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்தக் குடும்பங்கள் அனைத்தும் பின் வந்த சுனாமியில் வேறு தங்கள் குடும்ப உறவுகளைப் பறிகொடுத்து பரிதவித்த நிலையில் இருந்தன. அப்படியான நிலையில் காலத்தின் மடியில் புதைக்கப்பட்டுப் போன உண்மைகளை மீண்டும் தோண்டியெடுப்பதில் என்ன பலன் கிடைக்கப் போகின்றது?

    மற்றது நான் அன்றைய கட்டத்தில் நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அனுப்பப் பட்டிருந்தேனே தவிர புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்கான பணிப்புரையை பெற்றிருக்கவில்லை. அதற்குத்தான் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். நான் ஒரு அதிகாரி மட்டுமே. எனக்கிட்ட பணிக்கு மேல் நான் எதிலும் ஈடுபடுவதில்லை. நான் தேசம் நெற்றில் கருத்துக்களைப் பதிவு செய்வது கூட என் சுய ஆர்வம் காரணமாகவே தவிர இதற்கும் நான் கடமையாற்றும் அலுவலகத்துக்கும் எந்த தொடர்புமில்லை. ஆனாலும் எனக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் தகவல்களை அப்படியே மரித்துப் போக விடுவதற்கு என் மனம் விடுவதாக இல்லை.அதன் காரணமாகவே எனக்குத் தெரிந்தவற்றை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

    மூதூரை மீட்பதற்கான இராணுவ நடவடிக்கையின் போது கமாண்டோ படைப்பிரிவின் அல்பா பிரிவினர்தான் அங்கு களத்தில் இருந்தார்கள். அதே பிரிவுதான் வெருகல் வரையில் புலிகளுக்கு மரண அடி கொடுத்தது. அதற்கு மேலாக வன்னியிலும் மரண அடி கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

    மூதூரில் உக்கிரமான சண்டை ஆரம்பமானது தொடக்கம் நான் அங்கிருந்துள்ளேன். அங்கும் கூட புலிகளின் பல உறுப்பினர்கள் பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டே இருந்தார்கள். பெண் புலி உறுப்பினர்கள் பல ஆண் உறுப்பினர்களின் காமப் பசியைத் தீர்ப்பதற்கு பயன்பட்டிருந்தார்கள். அதிலும் பங்கருக்குள் ஆண் உறுப்பினர்கள் சிலருடன் ஒரு பெண் புலி உறுப்பினர் தனித்திருப்பார். அதன் போது அந்த மங்கை மற்றவர்கள் பார்த்திருக்க யாராவது ஒரு ஆண் உறுப்பினருடைய தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஒரு கட்டத்தில் அவர்கள் அதற்குப் பழக்கப்பட்டுப் போயிருந்தார்கள். சம்பூரை இராணுவம் விடுவித்த போது அங்கிருந்த புலிகளின் முகாம்களில் ஏராளம் பெண்களின் உள்ளாடைகள் இருந்தது பற்றியும் காம இரசனை ததும்பும் வீடியோ காட்சிகள் சீடிக்கள் புகைப்படங்கங்கள் சஞ்சிகைகள் பாவித்து வீசபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆணுறைகள் இருந்தது பற்றி அன்றைய கட்டத்தில் ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டது பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது.

    மாவிலாற்று அணையில் முகாமிட்டிருந்த புலிகள் அதிகாலை வேளையில் காமக்களியாட்டத்தில் ஈடுபட்டதும் அப்பிரதேச யுவதிகளை அதற்காக குறுகிய நேரத்துக்கு கடத்திச் சென்றதும் வெளியில் வராத விடயங்கள் தான். ஏனெனில் அது அந்தப் பெண்களின் வாழ்வை சீரழித்து விடும் என்பதற்காக மறைக்கப்பட்டது. மேலும் குறித்த தகவல் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மூலமாக தெரிவிக்கப்பட்டதை அடுத்தே ஒரு அதிகாலை வேளையில் வீரமிக்க ஒரு இராணுவச் சிப்பாய் அணைக்கட்டின் துருசை வெடி வைத்துத் தகர்த்து தண்ணீரைத் திறந்து விட்டார்.அந்த நேரத்தில் புலிகள் பங்கருக்குள் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன் காரணமாக ஊர்ந்து நகர்ந்த இராணுவ வீரனை அவர்கள் காணவில்லை.அந்த அணைக்கட்டில் புலிகள் அமைத்திருந்த பங்கர் இன்றும் அப்படியே தான் உள்ளது. அதற்குள் மண் மேட்டின் மீது செதுக்கப்பட்டிருந்த கட்டில் இன்னும் இருக்கின்றது. அதையெல்லாம் பொய் என்று உங்களால் மறுக்க முடியுமா?

    இப்படியாக பல இடங்களில் புலிகள் சிங்கள யுவதிகள் மீது கட்டவிழ்த்து விட்ட காம வெறியாட்டம் அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்படுவதில்லை.அது இரண்டு இனங்களைச் சேர்ந்த சிவில் மக்களிடையே முறுகல் நிலையைத் தோற்றுவித்து விடும் என்ற அச்சமே அதற்கான காரணமாகும்.தமிழ் யுவதிகள் பற்றிய விடயங்களை வெளிப்படுத்த முனைந்தால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு அதன் மூலம் இராணுவம் தொடர்பில் ஒரு அதிருப்தி ஏற்பட்டு விடுமென்ற எண்ணம் அரசாங்கத்திடம் உள்ளது. அதன் காரணமாவே அந்த உண்மைகள் உறங்க விடப்படுகின்றன. ஏனெனில் தமிழ் மக்களின் ஆதரவை வென்றெடுப்பதற்கான முயற்சியில் அது ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விடக் கூடும்.அது அரசாங்கத்தின் முன்னெடுப்புகளை பாதித்து விடும்.

    Reply
  • anathi
    anathi

    அஸ்ரப் அலி சொல்வதெல்லாம் நிரூபிக்கப்பட வேண்டும் என்றால் இரணமு வழிகள் இருக்கின்றன. ஒன்று இந்த கொடுமைகள் பதிவுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோக்களை கண்டு பிடித்தல்.அல்லது இவற்றில் ஈடுபட்டவர்கள் முன்வந்து ஒப்புதல் அளித்தல். தற்போது இராணுவம் செய்ததாக வெளியாகி இருக்கும் காட்சிகள் கண்டனத்திற்கு உரியவையல்ல.தண்டனைக்குரியவை.கண்டனங்களுக்கு இப்போ எந்த மரியாதையும் இல்லை.ஆனால்
    முதலில் எமது இனத்தவர்களாலேயே எம்மை எமதுபெண்களை காத்துக் கொள்ள முடியவில்லை.சிங்கள இராணுவத்திடம் நீதி கேட்க என்ன அருகதை நமக்கு உண்டு.முதலில் புலியோடு கணக்குத் தீர்த்து விட்டு மற்றவற்றை பிறகு பார்ப்போம்.

    Reply