கிளிநொச்சியில் சட்டவிரோதமான மண் அகழ்வால் இரணைமடு குளத்திற்கு பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க இராணுவத்தின் உதவியை நாடவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன்(18.08.2020) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை ஊடகங்கள் உட்பட பலரும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

குறிப்பாக இரணைமடுக் குளத்தின் கீழான சட்டவிரோத மணல் அகழ்வால் குளத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் உதவியை பெறவுள்ளதாகவும்  இது தொடர்பில் இன்று புதன்(19) கிழமை கிளிநொச்சி படைகளின் கட்டளைத்தளபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு, பன்னங்கண்டி, கண்டாவளை, பெரியகுளம், கல்லாறு, தட்டுவன்கொட்டி, ஊற்றுப்புலம், அக்கராயன், கிளாலி, முகமாலை, சோரன்பற்று, புளோப்பளை, மற்றும் பளையின் மேலும் பல பிரதேசங்கள் உட்பட பல இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறன்றது.

இதே நேரம் வடமாகாணமெங்கும் மண் அகழ்தல், காட்டு மரங்களை வெட்டுதல் என பல்வேறுபட்ட இயற்கை அழிப்பு நடவடிக்கைகள் வேகமாக இடம்பெறுவதையும்  காணக்கூடியதாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *