திருகோணமலை குச்சவெளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெற்றுள்ளது. குச்சவெளி பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்ற இவ்வமர்வில் 146 பேர் சாட்சியமளித்துள்ளனர். இதில் 53 பேர் நேரடியாகவும், ஏனையோர் எழுத்து மூலமாகவும் தங்கள் சாட்சியங்களை அளித்துள்ளனர். முற்பகல் 9.30 மணி தொடக்கம், பிற்பகல் 2மணிவரை சாட்சியங்கள் இடம்பெற்றன.
இச்சாட்சியங்களில் காணாமல் போனவர்கள் குறித்தும், மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் அதிகளவில் முறைப்பாடுகள் தெரிவிக்கபட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.