புதிய நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் இன்று கடமைகளைப் பொறுப்பெற்றார்.

புதிய நீதி அமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பதவியேற்றுள்ளார். இன்று திங்கள்கிழமை காலை அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சட்டமா அதிபர் மொஹான் பீரிசுக்கு தெரிவித்துள்ளதாகவும், இக்கைதிகளின் விடுதலை குறித்து பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

இன்று முதல் நீதிஅமைச்சு சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து பணியாற்றும் எனவும் அவர் கூறினார். நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Abdul
    Abdul

    நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்களெல்லாம் (நீதி?)யமைச்சர்கள். இதுதான் இலங்கை மக்களின் தலை விதி

    Reply