யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிருத்தித் திட்டங்களுக்கென ஐம்பது கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். இம்மாவட்டங்களில் தற்போதும் அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாவட்டங்களில் உள்ளூராட்சி நிர்வாகத்தை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இவ்விரு மாவட்டங்களிலும் 115 உள்ளூர் வீதிகள் 39 கோடி 30 இலட்சம் ரூபா செலவில் திருத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் முல்லை மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, பாண்டியன்குளம், துணுக்காய் மற்றும், கரைதுரைப்பற்று ஆகிய பிரதேச சபைக் கட்டடங்களும் இந்நிதி மூலம் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.