158 முன்னாள் புலிகள் நேற்று விடுதலை.

இறுதிக்கட்டப் போரின் போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 158 பேர் நேற்று வெள்ளிக்கிழமை தீபாவளியன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

படையினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பம்பைமடு, பூந்தோட்டம், நெளுக்குளம், ஆகிய இடங்களிலுள்ள புனர்வாழ்வு முகாம்களில் வைக்கபட்டிருந்தவர்கள் அந்தந்த முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களின் பெற்றோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *