வடமராட்சிக் கிழக்கில் ஆறு வீதிகளைப் புனரமைக்க இரணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த ஆறு வீதிகளும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ளவையாகும். இவ்வீதிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘வடக்கின் வந்தம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 40.2 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
நாகர்கோவில் பஸ் போக்குவரத்து வீதி, கயட்டை பஸ் போக்குவரத்து வீதி, யவுக்காநகர் வீதி, நாகதம்பிரான் கோவில் வீதி, முருகன் கோவில் வீதி, நாகதம்பிரான் கடற்கரை வீதி, ஆகிய ஆறு வீதிகளுமே புனரமைக்கப்படவுள்ளன. இப்பிரதேசத்தில் அண்மைக் காலத்திலேயே மீள் குடியேற்றம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.