போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பாடசாலைகளுக்கு இந்திய அரசாங்கம் உதவி.

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புனரமைப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. இதனையடுத்து புனரமைப்பிற்குத் தெரிவான பாடசாலைகளின் விபரப் பட்டியலை மீளாய்வு செய்யுமாறு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன் வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை புனரமைத்துத் தருமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் பிரகாரம் இந்திய அரசாங்கம் பாடசாலைகளைப் புனரமைக்க முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *