வவுனியா செட்டிக்குளம் ‘மெனிக்பாம்’ முகாமில் எஞ்சியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களை கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி முகாம்களுக்கு இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மெனிக்பாம் முகாமில் இன்னும் அறுநூறு குடும்பங்கள் மட்டும் உள்ளதாகவும், இவர்கள் தற்போது வசிக்கும் குடில்கள் பழுதடைந்துள்ளதாகவும் மழைகாலத்தில் இவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமலிருக்க கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி ஆகிய முகாம்களுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. எச்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இவ்விரு முகாம்களிலுள்ள மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில், மூவாயிரம் விடுகள் வெறுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விரண்டு முகாம்களிலும் குறித்த மக்கள் மாற்றப்படுகின்ற போது, அவர்களின் பராமரிப்பினை சுலபமாக மேற்கொள்ள முடியும் எனவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.