வவுனியா நகரசபைக் கூட்டம் முன்று உறுப்பினர்களுடன் நடைபெற்றமை சட்ட விதிமுறையின்படி சரியானதாம்.

வவுனியா நகரசபைக் கூட்டம் கடந்த சனிக்கழமை முன்று உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் இவ்வாறு நடைபெறுவதற்கு சட்ட விதிமுறையில் இடமுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையுடன் உள்ள வவுனியா நகரசபையின் கூட்டங்களில் எட்டு உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த யூலை மாதத்திற்குப் பின்னர் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் நகரசபைத் தலைவருக்கு பல உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் முன்பு உறுப்பினர்கள் முன்வைத்த 29 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இது வரை மேற்கொள்ளப் படவில்லை. இதன்காரணமாக கூட்டமைப்பு, புளொட், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் நகரசபையின் மாதாந்த கூட்டங்களைப் புறக்கணித்தனர். இதனையடுத்து கூடாமலிருந்து மாந்த கூட்டம் நேற்று முன்தினம் மூன்று உறுப்பினர்களுடன் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *