கேரதீவு சங்குப்பிட்டி பாதையின் திருத்த வேலைகள் நிறைவு பெற்று வரும் நிலையில் எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இப்பாதை திறக்கப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரதீவு – சங்குப்பிட்டி இடையிலான 4 கிலோ மீற்றர் வரைலான பழுதடைந்த பாதையும், அப்பகுதியில் அமைந்திருந்த பாலமும் திருத்தப்பட்டு நிறைவு பெறும் நிலையிலுள்ளது.
இப்பாதை ஆனையிறவு ஊடான பாதைக்குப் மாற்றுப் பாதையாக விளங்குகின்றது. மன்னார் மற்றும் பூனகரி பிரதேச மக்களுக்கு யாழ்ப்பாணத்திற்கான குறுகிய தூர பாதையாகவும் இது விளங்ககுன்றது. கேரதீவு சங்குப்பிட்டி ஆகியவற்றின் பாதைகளை சுமார் 50 மீற்றர் வரையிலான கடல் நீர் பிரிக்கின்றது. அதற்கான நகரும் பாதை ஒன்று முன்னர் பயன்பாட்டில் இருந்தமையும், ஆனையிறவுப்பாதை போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் வன்னிக்கும் யாழ்.குடாநாட்டிற்குமான பிரதான பாதையாக இப்பாதை பயன்படுத்தப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.