அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுடன் கைது செய்யப்பட்ட நால்வர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மூவர் மற்றும் ஒரு ஊடகவியலாளர் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இவர்களை விடுதலை செய்தது.
மேஜர் ஜெனரல் உபாலி எதிரிசிங்க, மேஜர் ஜெனரல் சுனில் சில்வா, பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன ஆகிய முன்று இராணுவ அதிகாரிகளும். ஊடகவியலாளர் றுவான் வீரக்கோன் ஆகிய முவருமே சரத் பொன்சோகாவுட்ன இணைந்து அரசாங்கத்தைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.