லண்டன் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த கலைவிழா

Selvarajah_Nஇலண்டன் ஆங்கிலோ தமிழ்ச் சங்கம் 21 ஆண்டுகளாக நடத்திவரும் வடக்கு லண்டன் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த கலைவிழா நேற்று 25.09.2010 என்பீல்டில் நடைபெற்றது. லீவலி உயர் தர பாடசாலையில் (Leavalley High School Hall, Bullsmoor Lane, Enfield EN3 6TW) 25.09.2010 சனிக்கிழமை மாலை 5.30முதல் இரவு 10.30 வரை நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, நூலகவியலாளர் திரு என்.செல்வராஜா கலந்துகொண்டார்.

பேச்சு, கவிதை, வாய்ப்பாட்டு. நடனம், விசைப்பலகை, மிருதங்கம், வயலின், நாடகம், தனி நடிப்பு, மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து வழங்கும் வாத்திய இசை நிகழ்ச்சி என்பன கலைவிழாவில் நடைபெற்றன.

தமிழர் மேம்பாட்டுப் பேரவையினர் நடத்தும் வருடாந்த தமிழ் மொழிப் பரீட்சையில் அதி உயர் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் அன்றையதினம் நடைபெற்றது.

இலண்டன் ஆங்கிலோ தமிழ்ச் சங்கத்தின் தலைவராக திரு.க.புவனேந்திரனும், உபதலைவராக திரு.க.மதிசூடியும், செயலாளராக திருமதி சந்திரா இரவீந்திரகுமார் அவர்களும், உப செயலாளராக திருமதி தி.குணரத்தினம் அவர்களும் இயங்கி வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *