யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான ‘நமது ஈழநாடு’ பத்திரிகையின் அச்சகத்திற்கு பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனை தற்போது சுரபி அச்சகம் என்ற பெயரில் நடத்தி வந்த 62 வயதான சின்னத்துரை குருதேவ் என்பவரையும் பொலிஸார் கைது செய்து கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த செவ்வாய் கிழமை கொழும்பிலிருந்து யாழப்பாணம் சென்ற குற்றப்புலனாய்வுப்பிரிவினர் இவ்வசகத்திற்கு சீல் வைத்ததோடு அதனை நடத்தி வந்த குருதேவ் என்பவரையும் கைது செய்துள்ளனர். இவ்வச்சகம் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.