”மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் தாமதமாவதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் காரணமில்லை” கூட்டுறவுச் சங்கம்

Co-operavtive_Shop_Jaffnaமீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் தாமதமாவதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் காரணமில்லை எனக் கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உலருணவு நிவரணப்பொருட்கள் தாமதமடைவதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் காரணமில்லை என கூட்டுறவுச்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  மீள்குடியேற்றப்பட்டு இரு மாதங்களுக்கு மேலாகியும் உலக உணவுத்திட்டத்தால் வழங்கப்படும் நிவாரண உணவுப் பொருட்கள் தாமதமாவதற்கு என்ன காரணம் என்று கேட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச்செயலகத்தின் பணிகள் தாமதம் காரணமாகவே கூட்டுறவுச் சங்கங்களுக்கு பட்டியல் வருவது தாமதமாகின்றதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய பதிவு : 22 செப்ரம்பர் 2010

‘வன்னியில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான உதவிப்பொருட்கள்  எவையும் கிடைப்பதில்லை’ – மக்கள் கவலை

வன்னியில் தற்பொது மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களின் உடனடித் தேவைகளுக்கான கூரைத்தகடுகள், தறப்பாள்விரிப்புகள் எவையும் வழங்கப்படுவதில்லை என மீள்குடியமர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மீள்க்குடியமரும் மக்களுக்கான நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதும் தாமதப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Co-operavtive_Shop_Jaffnaகிளிநொச்சிப் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பலருக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும், மீள்குடியேற்றத்திற்காக பதிவுகளை மேற்கொள்ளும் மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நிவாரண அட்டைகள் பதிவு செய்யப்படும் இடங்களிலேயெ வழங்கப்பட்டு வருகின்ற போதும், நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்படமலுள்ளதாகவும், கூட்டுறவச்சங்களுக்கு செல்லும் போது அதற்கான பட்டியல் தமக்கு வரவில்லை என நிவாரணப் பொருட்களை வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவித்து வருவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *