முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் கிராம அலுவலர் பிரிவில் 110 குடும்பங்கள் மீள்குடியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திஙகள் கிழமை இக்குடும்பங்களச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் குடியமர்த்தப்படுவர் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
செட்டிக்குளம் இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களே இவ்வாறு அவர்களின் சொந்த இடத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.