நல்லிணக்க ஆணைக்குழு இன்று அதன் விசாரணைகளை கிளிநொச்சியில் நடத்துகின்றது. இன்றும் நாளையும் இந்த விசாரணைகள் கிளிநொச்சியில் நடைபெறும் என தெரவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு இன்றும் நாளையும் கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்டறியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழ கடந்த சில வாரங்களாக அதன் விசாரணைகளையும் பல்வேறு தரப்பினரது சாட்சியங்ளையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.