தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 18வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற சபைக்கான பிரதிநிதியாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமித்த போதிலும் அதனை கூட்டமைப்பபு நிராகரித்தள்ளது. 18 வது அரசமைப்பத் திருத்தச் சட்டத்தை கூட்டமைப்பு எதிர்ப்பதால் ரணில் விக்கிரமசிங்க சுமந்திரனை நியமித்ததை தாம் நிராகரித்ததாக கூட்டமைப்பு தெரிவித்தள்ளது.
18வ அரசமைப்பு திருத்தச்சட்டமானது ஏற்கனவே நடைமுறையில் இருந்த 17வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்கிறது. அத்துடன். தேர்தல் ஆணையாளர். மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுச்சேவை, பொலிஸ் சேவை ஆகியவற்றிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு பொறுப்பாக இருந்து வந்த அரசியல் அமைப்பு சபைக்கு பதிலாக நடாளுமன்ற சபை என்கிற அமைப்பை நியமிப்பதறகு 18வது அரசமைப்புத் திருத்தசட்டம் வழிவகுத்துள்ளது. இந்த நாடாளுமன்ற சபையில் பிரதமர். எதிர்க்கட்சித் தலைவர், மற்றும்,சபாநாயகர் ஆகியோர் அங்கம் வகிப்பர். அத்துடன் பிரதமரும் எதிர்கட்சித் தலைவரும் தமக்கு விருப்பமான வேறு இனக் குழுமத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை நியமிப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்படுகின்ற இருவர் உட்பட ஐவர் கொண்டதாக அப்பாராளுமன்ற சபை இருக்கும்
இச்சபையே நீதிச்சேவை, பொதுச்சேவை, தகவல்துறை, தேர்தல் ஆணையகம், மனித உரிமை போன்ற துறைகளுக்கான பெயர்களையும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான பெயர்களையும் ஜனாதிபதிக்கு சிபார்சு செய்யும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. இவ்வாறு சிபார்சு செய்யப்படுகின்றவர்களை ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம் 18வது அரசமைப்பத்திருத்தச் சட்டத்தில் இல்லை.
இந்த அடிப்படையிலேயே நாடாளுமன்ற சபையின் உறுப்பினராக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்டார். எனினும் கூட்டமைப்பு இந்த நியமனத்தை நிராகரித்துள்ளது.
இதே வேளை, கூட்டமைப்பு இதனை நிராகரிக்கும் எனத்தெரிந்து கொண்டே தான் தாம் சுமந்திரனை நாடாளுமன்ற சபைக்குழுத் தலைவாராக பிரேரித்ததாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 18 வது அரசமைப்புத் திருத்தச்சட்டம் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் எதிர்ப்பினை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை சிக்கலில் மாட்டிவிடும் வகையிலேயே தாம் நகர்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.