கிளிநொச்சியில் வீடமைப்புப்பணிகள் தாமதமாகும் என்ற அரசஅதிபரின் செய்தியினால் மீள்குடியமர்ந்த மக்கள் கவலை!

Damaged_Houseகிளி நொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும்,  சேதமுற்ற வீடுகளை திருத்திக் கொடுப்பதற்கும் தாமதமாகும் எனவும் இது இது அடுத்த வருடமே ஆரம்பிக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதையடுத்து கூடாரங்களிலும் கூரைகளற்ற உடைந்த வீடுகளிலும் தங்கியுள்ள மக்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக இவ்வேலைத் திட்டங்கள் நடைபெறும் என இம்மக்கள் எதிர்பார்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Damaged_Houseஇது தொடர்பாக பொதுமக்கள் சிலர் தேசம்நெற் க்கு கருத்துத் தெரிவிக்கையில் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்த மக்களின் காணிகள் பலவற்றிற்கு உறுதி, அல்லது அனுமதிப் பத்திரங்கள் இல்லாமை  வீடமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படாமல் லுள்ளமைக்காண காரணமாக கூறப்படுககின்றது. ஆனால், காணி அனுமதிப் பதிரங்கள் உள்ளவர்களின் காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதிலும் உடைந்த, சேதமுற்ற  வீடுகளை திருத்திக் கொடுப்பதிலும் கூட தாமதம் நிலவுகின்றமையை அவர்கள் சுட்டடிக்காட்டுகின்றனர்.

புதிதாக விடுகளை அமைத்துக் கொடுக்கும் நிறுவனங்கள் கட்டம் கட்டமாகவே அதற்கான பணத்தை வழங்கி வருகின்றன. மக்கள் தங்கள் வீடுகளை அமைக்கும் பணிகளில் வேகமாக செயற்படுகின்ற போதும் குறித்த நிறுவனங்கள் மிக மந்த கதியில் செயற்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் சேதமுற்ற வீடுகளை திருத்துவதற்காகன பதிவுகள் மேற்கொல்லப்பட்டுள்ள போதும் அதற்கான கொடுப்பனவுக்ள வழங்குவதிலும் தாமதங்கள் காட்டப்படுகின்றன.

அத்துடன் குறைந்த தொகைப் பணத்தில் ஓட்டுக்கூரைகள் அமைத்து வீடுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறித்த நிறுவனங்களால் உத்தரவிடப்படுகின்றன. உடைந்த, கூரைகளற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் நகைகளை விற்றோ, அல்லது கடன் வாங்கியோ தங்கள் வீடுகளைத் தாங்களே திருத்தியமைத்தால் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படமாட்டாது எனவும், அவர்கள் வசதியுள்ளவர்களாக கணிக்கப்படுவார்கள் எனவும்  உதவி வழங்கும் நிறுவனங்ளைச் சேர்ந்தவர்கள் மக்களை அச்சறுத்தியும் வருகின்றனர். இதனால், மக்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் தொடர்ந்தும் அவல வாழ்விற்குள்ளேயே தள்ளப்படும் நிலை எற்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

”கிளிநொச்சியில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு அடுத்த வருடமே வீடுகள் கட்டுவது சாத்தியமாகும்” அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்

Rubavathy_Ketheeswaran_GAகிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் சாத்தியம் உடனடியாக இல்லை எனவும், அது ஜனவரி மாதத்தின் பின்னரே சாத்தியப்படும் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரவித்துள்ளார். கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது  தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அரச அதிபர் இவ்வாறு கூறினார். எதிர்வரும் மழைக்காலத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்க அதிபரிடம் விளக்கினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் இல்லை. பலர் வேறு நபர்களின் காணிகளில் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. குறித்த காலத்தில் காணிகளின் உரிமையாளர்கள் தங்கள் காணிகளை பொறுப்பேற்காமல் விட்டால் அக்காணிகளில் வசிக்கும் மக்களுக்கு அக்காணிகளிலேயே வீடுகளை அமைத்துக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்களுக்கு டிசெம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *