கத்திக்குத்தில் கொல்லப்பட்ட பெண்ணின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்ட இளம் பெண்ணொருவரின் கண்கள் அவரது தாயாரினால் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி சிறிபாகம என்ற இடத்தைச் சேர்ந்த சமீலா என்ற பெண் அவரது காதலனால் குறித்த பெண்ணின் தாயாருக்கு முன்பாக வைத்து கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார். இதன் பின்னர் குறித்த காதலன் பொலிஸில் சரணடைந்தார். இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயாரான மல்காந்தி குணவர்தன தனது மகளின் இரு கண்களையும் தானமாக வழங்கியுள்ளார்.

இலங்கை கண்தானச் சங்கத்தின் சார்பில் இரத்தினபுரி மாவட்ட வைத்திய நிபுணர்களால் கண்கள் அகற்றப்பட்டு பாதுக்கப்பட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *