ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான லக்ஷ்மன் ஜயக்கொடியின் மறைவுச் செய்தியை கேட்டு மிகுந்த சோகமுற்றதாக பிரதமர் தி.மு.ஜயரட்ன கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான லக்ஷ்மன் ஜயக்கொடி மறையும் வரை அக்கட்சியை கைவிடவில்லை. பணத்துக்காக கட்சியை காட்டிக்கொடுக்கவும் இல்லை என்பதை பெருமையுடன் கூறவேண்டும். கட்சியில் பல பதவிகளை வகித்த அவர் கட்சியின் முன்னேற்றத்துக்காக மட்டுமே செயற்பட்டவர் என்பதை மறந்துவிடக் கூடாது என்று அந்த அனுதாப செய்தியில் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.