சந்நிதி திருவிழாவில் இரு நாளில் 29 தங்கச் சங்கிலிகள் திருட்டு!

Sellacannathy_Templeதொண்டை மானாறு சந்நிதி ஆலயத்தில் நேற்று (Aug 24 2010) மட்டும் 12 தங்கச் சங்கிலிகள் களவு போயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தின் தீர்த்தத் திருவிழாவான நேற்று மிக அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவ்வேளையிலேயே இத்தங்கச் சங்கிலிகள் திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 17 சங்கிலிகளும், இரண்டு தாலிக்கொடிகளும் களவாடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்களவுகளிலிருந்து பொதுமக்கள் தங்கள் நகைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் முடிந்தளவு தங்கநகைள் அணிவதைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்திவருகின்ற போதும், பொதுமக்கள் அதனைக் கவனத்தில் கொள்ளாமல் தங்க நகைகளை அணிந்து திருவிழாக்களுக்கு வருவதாகவும், அதனை அவர்கள் ஒரு கௌரவமாகக் கருதுவதாகவும் பொலிஸார் ஒருவர் கருத்துக்கூறுகையில் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, கடந்த சனிக்கிழமை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனியார் பஸ் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணொருவரின் இரண்டரை இலட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகள் களவு போயுள்ளன. கணவனால் கைவிடப்பட்ட இரு பிள்ளைகளின் தாயான செல்வேந்திரன் இந்திராணி என்பவரின் நகையே களவாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் வைத்திருந்த 15ஆயிரம் ருபா பணமும் சில முக்கிய ஆவணங்களும் களவாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *