புகலிடம் வழங்குவதற்கு எதிராக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. துன்புறுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என்ற அடிப்படையில் புகலிடம் அளிப்பதோ அல்லது அகதி அந்தஸ்து வழங்குவதோ சட்டவிரோத மற்றும் முறையற்ற புலம்பெயர்வை மறைமுகமாக ஊக்குவிக்கும் நடவடிக்கை என அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
சட்டவிரோதமான முறையில் கடல் போக்குவரத்தை தடுத்து நிறுத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை இலங்கை விரிவுபடுத்தியிருப்பதாகவும் குறிப்பாக சிறிய படகுகளில் ஆட்கள் பொருட்களைக் கடத்திச் செல்வதைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன கூறியுள்ளார்.
வியட்நாமின் கனோயில் இடம்பெற்ற 17 ஆவது ஆசியான்மாநாட்டின் போது பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டவிரோத முறையற்ற புலம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளிப்படைத்தன்மை வாய்ந்த கொள்கைகள் உள்ளடக்கப்படவேண்டும் எனவும் இடமாற்றுத் தரிப்பிடமாக மற்றும் புலம்பெயர்வுகளை உள்ளீர்க்கும் நாடுகள் சட்டவிரோத புலம்பெயர்வு மற்றும் மக்கள் முறையற்ற நகர்வுகள் என்பவற்றுக்கு ஊக்குவிப்பு அளிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.