மரணமான ருஹுணு பல்கலைக்கழக மாணவர் அருணபண்டாரவை தாக்கியதாக கூறப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பதுளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பண்டார தனது தாயிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
ருஹ¥ணு பல்கலைக்கழகத்திலேயே கல்வி கற்கும் ‘பஸ்ஸா’ என்றழைக்கப்படும் இந்திக பஸ்நாயக்க என்ற சந்தேக நபர் தீவிர ஜே. வி. பி. ஆதரவாளர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
மாணவரின் மரணம் குறித்து நேற்று பொலிஸ் தலைமையகத்தில் விசேட செய்தியாளர் மாநாடொன்றை பொலிஸ் மாஅதிபர் நடத்தினர். இச்சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதுளை ஆஸ்பத்திரியில் மரணமான மேற்படி மாணவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென இரண்டு சி. ஐ. டி. பொலிஸ் குழுக்களும் இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
மரணமான பண்டாரவின் தாயார், சீ. ஐ. டி. பொலிஸாருக்கு நேற்று முன்தினம் இரவு வாக்கு மூலம் அளித்துள்ளார். கடந்த 22ஆம் திகதி பகல் 12.00 மணிக்கு பதுளை ஆஸ்பத்திரியில் 32வது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள எனது மகனை பகல் உணவுடன் பார்க்கச் சென்றேன். ‘என்னடா மகனே… பல்கலைக்கழகத்துக்கும் அனுப்பி பொலிஸார் அடிக்கும் வரை என்னடா செய்து கொண்டிருந்தாய்…? என்று கேட்டேன்.
என்னை பொலிஸார் அடிக்கவில்லை அம்மா… என் அறைக்குள் வந்து ‘பஸ்ஸா’ தான் என் தலையில் பொல்லால் அடித்தான். என் முதுகிலும் அடிபட்டது என மகன் கூறினான். யாராடா அந்த ‘பஸ்ஸா’ எனக் கேட்டேன். எனக்கு கீழ் மட்டத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் தான் எனக் கூறினான்’ என பண்டாரவின் தாய் வாக்கு மூலம் அளித்துள்ளார். பண்டார தனது தாய்க்கு தெரிவித்த விடயங்கள் அவரது மரணவாக்கு முலமாகத்தான் கொள்ள வேண்டியுள்ளது என்றும் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
சீ.ஐ.டி. பொலிஸாருக்கு தான் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் ‘பஸ்ஸா’ என்றழைக்கப்படும் இந்திக பஸ்நாயக்கவைக் கைது செய்ய விசேட பொலிஸ் தனிப்படைகள் இரண்டு அனுப்பப்பட்டுள்ளன. ஊவா பரணகமவி லுள்ள அவரது வீட்டை சோதனையிட்ட போது அவர் அங்கு இருக்கவில்லை. சந்தேக நபரான பஸ்நாயக்கா எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார். பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு ள்ளனர். சந்தேக நபரான பஸ்நாயக்கவின் பின்னணி பற்றி பொலிஸார் விசாரணை செய்த போது இவர் தீவிர ஜே.வி.பி. ஆதரவாளர் என தெரியவந்துள்ளது.
மரணமான மாணவன் தொடர்பாக பொலிஸாரினால் சேகரிக்கப்பட்ட அனை த்து சாட்சியங்களும் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மரணம் தொடர்பான இறுதி தீர்ப்பு நீதிமன்றமே வழங்கும். அந்த மாணவரை பொலிஸார் தாக்கியதற்கான சாட்சியங்கள் இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றார்களே என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது, இரண்டு சீ.ஐ.டி. குழுக்களும், இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்களும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த சாட்சி யங்களை அவர்களிடையே ஒப்படைக்கலாம். ஆனால், அவை பொய் சாட்சியங்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
rohan
என்னமோ நடக்குது – மர்மமா இருக்குது – சர்வாதிகாரம் கதவைத் தட்டுது!