ருஹுணு பல்கலை: முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி உத்தரவு

ருஹுணு பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பாக முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளாரென ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மேற்படி மாணவனின் மரணம், பல்கலைக்கழகத்தின் பதற்றநிலை தொடர்பாக விரிவாக ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளது.

இதேவேளை இம்மரணம் தொடர்பாக இதுவரை கிடைக்கப் பெற்ற அறிக்கைகள் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் பொலிஸ் திணைக்களம் நடத்தும் இவ்வாறான விசாரணைகளின் விபரங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *