“எனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரின் சடலத்தை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்” தர்சிகாவின் தாயார் நீதி மன்றில் மனு!

வேலணை வைத்தியசாலை மருத்துவமாது ச.தர்சிகாவின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும், அவரின் சடலத்தைத் தோண்டியெடுத்து மீண்டும் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் எனவும் அவரது தாயார் July 21 2010 நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் நீதிமன்றில் இது குறித்த கோரிக்கை மனுவொன்றை கையளித்துள்ளார். இம்மரணம் தொடர்பான விசாரணைக்கு எவரும் செல்லக்கூடாது என்று தம்மை சிலர் அச்சுறுத்தியதாகவும், அவர் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது மகளான தர்சிகா தற்கொலை செய்யவில்லை அவர் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தர்சிகாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று ஊர்காவற்றுறை நீதவான் ஆர்.வசந்தசேனன் முன்னிலையில் விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் பிரியந்த செனவிரட்ணவும் மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *