யாழ். தென்மராட்சிப் பகுதியிலுள்ள தவறணை ஒன்றில் கள் அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஆறு பேர் மயக்கமுற்ற நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மராட்சியிலுள்ள சாவகச்சேரிப் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணை ஒன்றில் July 21 2010 கள்ளருந்திய ஒருவர் மயக்கமுற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர் சாவகச்சேரியைச் சேர்ந்த சின்னையா செல்வராசா (வயது 50) என்பவராவார். ஏனைய ஆறு பேர் மயக்கமுற்ற நிலையில் கொண்டுவரப்பட்டு யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள் நஞ்சாகியிருக்கலாம் அல்லது கள் வைத்திருக்கும் கொள்கலனுக்குள் ஏதும் கலந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். குடாநாட்டிற்கு வரும் பெரும்பான்மை இனத்தவர்களும் யாழப்பாணத்து கள் மீது அலாதிப் பிரியம் உள்ளவர்களாக காணப்படுகின்ற நிலையில், இவ்வாறான அசம்பாவிதங்களைத் தவிர்க்க கள்ளுத் தவறணைகளில் தினசரி பரிசோதனைகளை நடத்தவது முக்கியமானது என சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.