யாழ். உயர்பாதுகாப்பு வலயங்கள் சிலவற்றில் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

High-Security-Zoneயாழ். குடா நாட்டில் உயர்பாதுகாப்பு வலயங்களாக உள்ள சில பகுதிகளில் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தெல்லிப்பழை, கோப்பாய், மற்றும் யாழ்.உயர் பாதுகாப்புவலயத்தின் மேற்குப் பகுதிகளில் மக்களை மீள் குடியேற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

High-Security-Zoneஉயர்பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீள்குடியேற்றம் செய்வது குறித்து பாதகாப்புப் படைஅதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துமாறும், அதன் ஆரம்ப வேலைகளை கவனிக்குமாறும் யாழ். அரசாங்க அதிபருக்கு மீள்குடியேற்ற அமைச்சு பணிப்புரை வழங்கியுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, மக்களின் மீள்குடியேற்றத்திற்கான அனுமதியைப் பெற யாழ். அரச அதிபருக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related News:

உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த தாராகுளம் மக்களுக்கு 18 வருடங்களின் பின் குடியமர அனுமதி!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *